Skip to main content

அஜித் டீமில் இணைந்த சிவகார்த்திகேயன் 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
sivakarthikeyan

 

 

 

சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் ஆகியோர் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை விரைவில் முடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக கே.ஜே.ஆர் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தற்போது  அறிவித்துள்ளனர். ஏற்கனவே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் நயன்தாராவின் ‘ஐரா’ படத்தையும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் இணை தயாரிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த சிஸ்டத்தை மாற்ற வருகிறாரா சிவகார்த்திகேயன்..? - வெளியானது ஹீரோ டீசர்!

Next Story

சிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் 

Published on 18/02/2019 | Edited on 18/02/2019
kalyani

 

 

சிவகார்த்திகேயன் - ராஜேஷ்.எம் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர்.லோக்கல்' மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கல்யாணி பிரிதர்ஷன் ஹலோ என்ற தெலுங்கு படத்திலும், தமிழில் துல்கர் சல்மானுடன் 'வான்' படத்திலும்  நடிக்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.