சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் ஆகியோர் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை விரைவில் முடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக கே.ஜே.ஆர் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். ஏற்கனவே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் நயன்தாராவின் ‘ஐரா’ படத்தையும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தையும் இணை தயாரிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.