Skip to main content

ரஜினியுடன் ஜோடி போடும் பழைய முன்னணி நடிகை 

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
simran

 

 

 

ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் உள்ள டோராடூனில் துவங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற 16ஆம் தேதி ரஜினிகாந்த் டேராடூனுக்கு சென்றுள்ளார்.மேலும் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் நாயகியாக சிம்ரன் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பிரபல ஹிந்தி பட நடிகர் நவசுதீன் சித்திக் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சம்பத்தப்பட்ட காட்சிகளையும், சிம்ரன் சம்பத்தப்பட்ட காட்சிகளையும் சேர்த்து மொத்தம் 2 வாரங்களில் ரஜினி சம்பந்தப்பட்ட அணைத்து காட்சிகளையும்  முடித்துவிட்டு, பின்னர் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...? உண்மை நிலவரம் இதோ..!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vp

 

பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.

 

 

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.