Skip to main content

'சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும்' - சந்தானம் பேச்சு  

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
santhanam

 

தில்லுக்கு  துட்டு 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் சந்தானம் பேசும்போது....

 

"நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான். 'லொள்ளு சபா' தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம். ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.'மொட்டை' ராஜேந்திரன்,  விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

 

 

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார். கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ். நடிகராக இருப்பதை விட தயாரிப்பாராக இருப்பது தான் கஷ்டம். பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது. நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என்னை 'லொள்ளு சபா'வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு  அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். பி.ஆர்.ஓ. ஜான்சன் அவர்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3டியில் சந்தானம் படம்...

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

கடந்த 2016ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம்  ‘தில்லுக்கு துட்டு’. சந்தானம் முதன் முதலில் சினிமாவுக்கு அறிமுகமாக காரணமாக இருந்த லொல்லு சபா குழுவுடன் இணைந்து இந்த படத்தில் நடித்தார் சந்தானம். லொல்லு சபா இயக்குனர் ராம்பாலாதான் இப்படத்தை இயக்கினார். சந்தானத்துடன் கருணா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி என பலர் காமெடி நடிகர்கள் நடித்திருந்தனர். காமெடி பேய்ப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 

santa

 

 

முதலாம் பாகத்தின் வெற்றியை அடுத்து 2018ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக சந்தானம் அறிவித்தார். இதன்பின் இப்படம் கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியானது. இப்படமும் முந்தைய பாகத்தை போலவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  
 

மூன்றாம் பாகம் வரை வந்திருப்பதால் தொழில்நுட்பத்தில் அசத்த வேண்டும் என்று 3டியில் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். 
 

18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி, இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தையும், சந்தானத்துடன் சேர்ந்து இவர்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

தில்லுக்கு துட்டு 2 மக்கள் கருத்து ...!!!