Skip to main content

அனுஷ்கா பெயரில் பண மோசடி - பட ஆசையால் தயாரிப்பாளருக்கு நடந்த சம்பவம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Money laundering in the name of Anushka

 

தமிழில் நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அனுஷ்கா பெயரில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலாளர் எல்லா ரெட்டி என்பவர் அனுஷ்காவை சந்திக்க வைத்து அவரிடம் கால்ஷீட்டை பெற்றுத் தருவதாகக் கூறி அனுஷ்காவை வைத்துப் படமெடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் லட்சுமண் சாரியிடம் ரூ.51 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மணி சர்மாவின் கால்ஷீட்டையும் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

 

ஆனால் பல முறை தயாரிப்பாளர் லட்சுமண் சாரியை பெங்களூருக்கு அழைத்துச் சென்ற எல்லா ரெட்டி, கடைசி வரை இருவரையும் சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தயாரிப்பாளர் லட்சுமண் சாரி, எல்லா ரெட்டியிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். எல்லா ரெட்டி பணத்தைக் கொடுக்காததால் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் லட்சுமண் சாரி புகார் அளித்திருந்த நிலையில் எல்லா ரெட்டியை கண்டித்துள்ளார்கள். ஆனால், பணம் திரும்ப வராததால் காவல் நிலையத்திற்குத் தயாரிப்பாளர் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்