Skip to main content

ஜோதிகாவின் அடுத்த படம் இவருடன்தான்! 

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
jyothika

 

 

 

பாலாவின் 'நாச்சியார்' படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா தற்போது 'செக்கச் சிவந்த வானம்' மற்றும் ‘காற்றின் மொழி’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இவ்விரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் ஜோதிகா அடுத்ததாக ஜோக்கர், காஸ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்ஜிகே ஆகிய படங்களை  தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கும் இப்படத்தின் மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

 

dhana

 

 

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

 

Next Story

டிக்கெட்டிற்கு 2 ரூபாய்... கஜா புயலுக்கு நிதி அளிக்கும் காற்றின் மொழி !

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
kaatrin mozhi

 

போப்டா சார்பில் தனஞ்செயன் தயாரித்து, ஜோதிகா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'காற்றின் மொழி' திரைப்படம். இதற்கிடையே சமீபத்தில் தமிழக 'டெல்டா' பகுதி மக்கள்  'கஜா' புயலால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு நிவாரண நிதி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் 'காற்றின் மொழி' தயாரிப்பாளர் தனஞ்செயன். அதில்.... 

 

 

 

"காற்றின் மொழி' திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழக 'டெல்டா' பகுதி மக்களுக்கு நீங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம். இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு 'காற்றின் மொழி' டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் 'கஜா' புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.