Skip to main content

'பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது' - #MeToo வில் இலியானா காட்டம் 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
ileana

 

'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் 'நண்பன்' படம் மூலம் பிரபலமான இலியானா தற்போது ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவருக்கு திருமணமாகி கர்பமாகிவிட்டார் என செய்திகள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்தும், 'மீடூ' குறித்தும் பேசியுள்ளார். அதில்...

 

 

 

பெண்களின் கசப்பான அனுபவங்களை ‘மீடூ’வில் பேசுவது வேதனைக்குரிய வி‌ஷயம். மேலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க கூடாது. ‘மீடூ’ போராட்டத்தினால் நிறைய இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைத்து இருக்கிறார்கள். ‘மீடூ’வால் எதிர்காலத்தில் சினிமா துறை சிறு பாலியல் சம்பவம் கூட இல்லாமல் சுத்தமாக மாறும் என்று நம்புகிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம் குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌ஷயங்கள் குறித்து நான் தற்போது பேச விரும்பவில்லை. எனது நண்பர் ஆண்ட்ரூவுடன் உள்ள உறவு வி‌ஷயத்தில் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அதற்கு மேல் என்னால் பேசமுடியாது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுசாந்த் மரணம் குறித்து நடிகை இலியானா...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

ileana


எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
 


'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடிகை இலியானா சுசாந்த் மரணம் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கடும் உணர்வு மூட்டத்தில் இந்த நாளை கடந்தேன். பல மணி நேரங்கள் தொடர்ந்து அழுதேன். எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இந்த இழப்பு என்னை மிகவும் ஆழமாகப் பாதித்து விட்டது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும், என்னால் ஆழ்ந்த இரங்கலை மட்டுமே தெரிவிக்க முடியும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.

 

 

 


நான் சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. நாம் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறோம். அதாவது மனிதர்களாகிய நாம் அனைவருமே, நம் உணர்வுகளை மறைக்கவே விரும்புகிறோம் ஆனால் சில சமயம் அவை இதயத்திலிருந்து அழுகையாக வெடித்து வெளியே வந்துவிடுகின்றன.

நாம் நன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறோம் ஆனால் 'நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.. ப்ளீஸ் காப்பாற்றுங்கள்' என்று அலறவே நாம் ஆசைப்படுகிறோம். உள்ளே நம்மைத் தின்று கொண்டிருக்கும் வலியை மறைத்து புன்னகை செய்கிறோம். அதை யாரும் பார்க்காத போது சுக்குநூறாக உடைந்து நொறுங்கிப் போகிறோம்..
 

http://onelink.to/nknapp


நாம் மனிதர்கள்.. நாம் தோற்றுப் போனவர்கள். சரியாக இல்லாமல் இருப்பது ஒன்றும் தவறல்ல. ஆனால் அப்படியே இருந்துவிடுவதுதான் தவறு. உதவி கேட்பது பலவீனம் என்று அர்த்தம் அல்ல. நீங்கள் தனி நபர் அல்ல. எனக்கு அந்த உணர்வு நன்றாகவே புரியும்.. நான் இங்கே பிரசங்கம் செய்ய வரவில்லை..

உங்கள் அனைவரிடமும் நான் கேட்பது தயவுசெய்து அன்போடு இருங்கள் என்பது தான். இந்த உலகுக்கு உங்கள் அன்பு அதிகமாக தேவை.. உங்கள் அதீத இரக்கமும், அதீத அன்பும் தேவை. உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் அன்போடு இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 

 

Next Story

மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் இலியானா!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கடந்த 2006ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் கேடி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. இதன்பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய்யுடன் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்தார். 
 

ileana d cruz

 

 

கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை தீவிரமாக காதலித்தார் இலியானா. பின்னர், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக்கப் செய்துகொண்டனர்.

பிரேக்கப்புக்கு பின்னர் காதல் வலியில் இருந்து மீள மிகவும் கஷ்டப்பட்ட இலியானா, சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்ட இலியானா தனக்கு வந்த பட வாய்ப்புகளையும் தவரவிட்டார். தற்போது எப்படி இதிலிருந்து மீண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அதில், “வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வருவதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருக்கிறேன். மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள். இதனாலேயே நான் ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருகிறேன்” என்றார்.