Skip to main content

தமிழ்ராக்கர்ஸ்ஸில் படம் வெளியிடுபவர்கள் இவர்களா...? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
tamilrockers

 

சினிமாவை மிரள வைத்துக்கொண்டிருக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதளம் புது படங்களை வெளியான அன்றே  திருட்டுத்தனமாக தன் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றது. மக்களும் திரையரங்குகளுக்கு செல்லாமல் கணினியிலோ, அல்லது கைபேசியிலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்து விடுகின்றனர். இதனால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் இந்த 'தமிழ் ராக்கர்ஸ்' இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றொரு புறம் இவர்களுக்கு எப்படி வருமானம் வருகிறது என்றால் அது விளம்பரங்கள் மூலம்தான். மாதம் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இருந்தும் இந்த விளம்பர கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டால் கூட இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

 

 

 

செல்போனில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. பல வழக்குகள் மற்றும் போலீஸ் நடவடிக்கை இருந்தபோதிலும், இந்த இணையதளம் அனைத்தையும் மீறி புதிய படங்களை வெளியிட்டு விடுகிறது.  இது எப்படி தமிழ் ராக்கர்சால் முடிகிறது. அது எப்படி இயக்குகிறது என்றால் உலகளாவிய ரீதியில் இதனுடைய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்களிப்பு செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர்கள் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் சென்று படம் பார்க்கும் சமயம் படங்களை வீடியோ பதிவு செய்து புது படங்களை பதிவேற்றம் செய்வதாக ஆதாரம் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் செய்த வீடியோ பதிவு பணிக்காக பணம் பெறுகின்றனர்.

 

 

 

மேலும் இவர்கள் இன்னமும் சிக்காததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, 'தமிழராக்கர்ஸ்' வலைத்தளமானது அதன் யுஆர்எல்-ஐ அடிக்கடி மாற்றியமைத்து கொள்வதாகும்.  உதாரணமாக tamilrockers.com என்று இருக்கும் யுஆர்எல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனே tamilrockers.cl என்று மாற்றிவிடுவார்கள். மேலும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட யுஆர்எல் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வலைத்தளம் இன்னொரு யுஆர்எல்-க்கு உடனடியாக மாறுகிற காரணத்தால் இதுவரை தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கண்டுபிடிக்க இயலவில்லை.  மேலும் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவும் இதற்கு அமோகமாக இருப்பதாலும் ஒன்னும் செய்யமுடியவில்லை. எது எப்படியோ அரசும், திரையுலகமும், மக்களும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் இதற்கு கண்டிப்பாக தீர்வு வர வாய்ப்புள்ளது. அதற்கு முதல் முயற்சியாக தியேட்டர் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல் விலையையும் வெகுவாக குறைத்தால் நன்று.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

“விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன்” - விஷால் பேட்டி

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

nn

 

நடிகர் விஷால் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது 46வது பிறந்த நாளை ஒட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வாழ்த்துவேன். ஒரு நான்கு பேர் அமர்ந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்களும் ரசிகர்களும் அளிக்கும் ஆதரவே மகத்தான விருது. 45 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் மூலம் நடிகர் ரஜினி மக்களை தற்போது வரை மகிழ்வித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வயதிலும் திரையில் சாதனை படைத்து வருகிறார். அமைச்சர் உதயநிதி செயல்பாடுகள் பற்றி மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர அது பற்றி எனக்கு தெரியாது” என்றார்.