Skip to main content

மகனாகப் பாவித்து வளர்த்த சித்தி; இளைஞன் செய்த முறையற்ற செயல் - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 06

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Lady Detective Yasmin  Case Explanation  06 

 

மகனை போல வளர்த்த ஒருவனின் முறையற்ற செயலை கண்டுபிடித்தது பற்றிய ஒரு வழக்கு குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் நம்மிடம் விவரிக்கிறார்.

 

50 வயதான பெண் ஒருவர் தன்னுடைய அக்கா மகனைத் தன்னுடன் துணைக்கு வைத்து வளர்த்து வந்தார். கல்லூரியில் படிக்கும் அந்தப் பையன் இவரை நன்றாக கவனித்து வந்தான். ஆனால் இரவு தூங்கிய பிறகு தனக்கு ஏதோ நேர்வதாகவும் காலையில் தான் வேறு ஒரு கோலத்தில் தினமும் எழுவதாகவும் கூறினார் அந்தப் பெண். யாராவது தன் மீது ஆவி போன்றவற்றை ஏவி விடுகிறார்களோ என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. இதில் கண்டுபிடிப்பதற்கு ஏதும் இல்லாததால் இந்த வழக்கை ஏற்பதற்கு நாங்கள் தயங்கினோம். மருத்துவரிடம் செல்ல அவருக்கு அறிவுறுத்தினோம். 

 

தான் தூங்கியதற்குப் பிறகு தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அந்த வழக்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம். இரவில் அவருடைய வீட்டை கவனிக்க ஆரம்பித்தோம். அவருடைய வீட்டுக்கு யாரும் வரவில்லை. ஆனாலும் அந்த அனுபவம் அவருக்குத் தொடர்ந்தது. அவருடைய வீட்டில் கேமரா பொருத்தினோம். பையன் தினமும் பால் கலந்து அவருக்கும் கொடுத்துவிட்டு அவனும் குடித்தான். சில நாட்களில் சர்க்கரைக்கு பதில் பாலில் வேறு எதையோ கலந்தான். அவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரிடம் அவன் தவறான உறவில் ஈடுபட்டான்.

 

இதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் அவனை அவ்வளவு நம்பினார். ஆனாலும் சொன்னோம். அக்கா - தங்கை, தந்தை - மகள் என்று சொல்லிவிட்டுத் தவறான உறவில் இருப்பது நிறைய நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும். பெண்களையும் ஒரு சக உயிராக ஆண்கள் மதிக்க வேண்டும். அதன் பிறகு அந்தப் பையனோடு அந்தப் பெண் இருக்கவில்லை. அந்தப் பையனும் அதன் பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து வாழ்ந்து வருகிறான். உறவுகளின் பெருமைகள் பற்றி, முக்கியத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

 

 


 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.