Skip to main content

இளம் மனைவியை கொடுமை செய்த சைக்கோ கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 24

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Advocate Santhakumari's Valakku En - 24

 

வரதட்சணை கொடுமை குறித்த ஒரு வழக்கை நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

சுபஸ்ரீ படித்த பெண். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம் என்று நினைத்து அவளுடைய பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை எதுவுமே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மாப்பிள்ளை வீட்டார் நல்லவர்களாக இருந்தனர். ஆனாலும் 101 பவுன் நகை உட்பட பல்வேறு சீர்வரிசைகளுடன் திருமணத்தை பெண் வீட்டார் நடத்தினர். நகைகளைப் பார்வையிட வேண்டும் என்று மாமனார் கேட்டதால் அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. நகைகள் மாமியாரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டன. 

 

மாப்பிள்ளை வீட்டில் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. திடீரென்று ஒருநாள் அவன் இந்தப் பெண்ணோடு வாழ விருப்பமில்லை என்று கூறி வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் பெங்களூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர். அவன் அவளை ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவளை வேலைக்குப் போகக்கூடாது என்று சொன்னதால் வேலைக்கும் அவள் போகவில்லை. இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று மாமனார், மாமியார் அடுத்த பிரச்சனையைக் கிளப்பினர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் பிரச்சனை அவனிடம் தான் இருக்கிறது என்பது தெரிந்தது.

 

அனைத்தையும் அவள் சகித்துக்கொண்டு வாழ்ந்தாள். அதன் பிறகு அவனுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டது. அவளுடைய தாயோ, தந்தையோ வீட்டுக்கு வந்தால் அவர்களை அவன் மதிப்பதில்லை. அவர்கள் இனி வரக்கூடாது என்று கூறினான். அவளை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்று நினைத்து தினமும் அவன் கலாட்டா செய்தான். அவள் மீது அவன் வன்முறையிலும் ஈடுபட்டான். ஒருமுறை அவளைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அவன் வெளியே கிளம்பினான். பக்கத்து வீட்டார் பார்த்து அவளுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். 

 

பெற்றோர் வந்து சமாதானம் பேசினாலும் அவன் திருந்துவதாக இல்லை. சேர்ந்து வாழ வேண்டும் என்று நாங்கள் மனு போட்டோம். விவாகரத்து வேண்டும் என்று அவன் மனு போட்டான். விவாகரத்து கொடுத்தால் தான் நகைகளை திரும்பக் கொடுக்க முடியும் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர். இந்த வழக்கு கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒரு யுத்தம் போல் நடந்தது. இறுதியாக மாப்பிள்ளை தரப்பிலிருந்து 40 லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தனர். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அந்த பெண் இப்போது நிம்மதியாக வாழ்கிறாள்.

 

 

 

Next Story

மாமியாரிடம் மோசடி; மருமகளுக்கு சிறை தண்டனை - காலம் கடந்து வென்ற நீதி!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Cheating on mother in law Jail sentence for daughter in law  justice won over time
மருமகள் நந்தினி - மாமியார் சந்தானலட்சுமி

பூந்தமல்லி பகுதியை சேர்ந்த நந்தினி, தனது கணவர் ரவி எட்வின் விபத்தில் இறந்ததில் இருந்து தன்னுடைய மாமியார் சந்தானலட்சுமி தன்னை கொடுமைப்படுத்துவதாக புகாராளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், சொத்தை அபகரிக்கும் முயற்சியில் தன் மாமியார் சந்தானலட்சுமி மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதையும், போலியான கையெழுத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையையும், சொத்தையும் அபகரிக்க முயன்றுள்ளார் என்பதும் நிரூபணமானதால், அவ்வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக சந்தானலட்சுமியின் வழக்கறிஞர் பிரதீப் அசோக்குமார் கூறுகையில், "பூந்தமல்லியைச் சார்ந்த மறைந்த எட்வின்ஸ்பின் என்பவரின் மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு ராஜா எட்வின், ரவி எட்வின் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் சந்தான லட்சுமி சவுதி அரேபியாவில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வரும் தன் மூத்த மகனான ராஜா எட்வினுடன் தங்கியிருந்தார். சென்னைக்கு அடிக்கடி வந்து செல்வார். ராஜா எட்வின் சம்பாதித்த பணத்தில் அவர் விருப்பத்தின்படி, பூந்தமல்லி பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரில் சொகுசு வீடுகளை தன் பெயரில் வாங்கியிருந்தார் சந்தானலட்சுமி. 

Cheating on mother in law Jail sentence for daughter in law  justice won over time
வழக்கறிஞர் பிரதீப் அசோக்குமார்

இந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை கிண்டியில் நடந்த சாலை விபத்தில் ரவி எட்வின் உயிழந்தார். மகன் இறந்த செய்தியறிந்து சவுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்தார் சந்தான லட்சுமி. இளைய மகனுக்கான ஈமச்சடங்குகள் முடிந்த சில தினங்களிலேலே, ரவி எட்வினின் மனைவி நந்தினியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இருவருக்குமிடையே சிறு சிறு சண்டைகள் உருவான நிலையில், கே.கே.நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மூலம் அடியாட்களை வைத்து சந்தானலட்சுமியை வீட்டை விட்டே விரட்டியடித்தார், பின்னர் 2010ஆம் வருடம் சவுதியிலிருக்கும் தன் மூத்த மகனிடமே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நந்தினி, கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் சந்தானலட்சுமி மீது குடும்ப நல வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கு விசாரணையில், எங்கள் தரப்பில் சில ஆவணங்களை சரிபார்த்த நிலையில், நந்தினிக்கு ஏற்கெனவே உமாமகேஸ்வரன் ராவ் என்பருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது தெரியவந்தது. அவரோடு விவாகரத்தானபின் ரவி எட்வினுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரவி எட்வின் விபத்தில் இறந்தார். அதன்பின்னர், முதல் கணவரின் பெண் குழந்தையை இரண்டாவது கணவரான ரவி எட்வினின் வாரிசு என்று போலியாக வாரிசுச் சான்று பெற்றது தெரியவந்தது. 

சந்தானலட்சுமி

மேலும், கடந்த 2010, பிப்ரவரியில், சந்தான லட்சுமி சவுதிக்கு சென்ற பின்னர், விபத்தில் பலியான ரவியின் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக சந்தானலட்சுமியின் கையெழுத்தை போலியாகப் போட்டிருந்த மோசடியும் தெரியவந்தது. இந்த காப்பீட்டுத் தொகை வங்கிக்கு வந்த நிலையில், வங்கி மேலாளரிடம் காப்பீட்டுத் தொகை 23 லட்சத்தை வழங்குமாறு நந்தினி வற்புறுத்தியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், சந்தானலட்சுமி சார்பில் சிறு வழக்கு நீதிமன்ற பதிவாளரிடம் புகார் மனு அளித்தோம். எங்களுக்கு தெரியாமல் இழப்பீடு தரக்கூடாது என்று புகாரளித்தோம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றம் மூலம் முதல் தகவல் அறிக்கை பெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் விசாரணை நடத்தினர். இதில் 18 பேர் அளித்த சாட்சியங்களின் பெயராலும், 35 அரசு தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், நந்தினி மோசடி செய்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

அதையடுத்து, நந்தினி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே கடந்த 2018ஆம் ஆண்டு சந்தான லட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது ஒரு வருத்தமான நிகழ்வு. ஆனாலும் இன்றுவரை சந்தான லட்சுமிக்கு சொந்தமான பூந்தமல்லியிலுள்ள பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரிலுள்ள சொத்துக்கள் நந்தினியின் அனுபவத்தில்தான் உள்ளது என்பது வருத்தமாக ஒன்று. மனுதாரர் இறந்த நிலையிலும் அவருக்கு நீதி கிடைத்துள்ளது என்ற வகையில் இத்தீர்ப்பு குறித்து பெருமிதம் கொள்கிறோம்" என்றார். கால தாமதம் ஆனபோதிலும், இவ்வழக்கில் நீதி வென்றிருப்பது, நீதித்துறையின் மீது நம்பிக்கை அளிக்கிறது. 

Next Story

மாதவிடாய் நாளில் வீட்டுக்குள் வரக்கூடாது; அடாவடி மாமியாரிடம் சிக்கிய மருமகள் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 55

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Advocate santhakumaris valakku en 55

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ராதா என்கிற பெண் இரண்டாவது திருமணம் செய்தவர். என்னை பார்க்க வந்திருந்தார். ஆரம்பிக்கும் போதே தான் ஒரு ஐயர் பெண் என்று ஆரம்பித்தார். சாதியைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது என்றும், அது தன்னை எவ்வளவு பாதித்தது என்றும் சொல்ல வந்ததால் தான் குறிப்பிட்டு சொன்னேன் என்று தன் கதையை ஆரம்பித்தார். ராதா மூன்று டிகிரி வாங்கியவர், வேலை பார்க்கும் நல்ல திறமையானவர். முதல் திருமணம் தோல்வியில் முடியவே ஒரு சோர்வு வருகிறது. அதனால், தனியாக பெங்களூரில்தான் வேலை பார்த்து வருகிறார். 

அவளது பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பேசி சம்மதிக்க வைத்து தன்னை போலவே இரண்டாவதாக வரன் பார்க்கும் பையனை பார்த்து பேச பிடித்து போகிறது. அவர்கள் ஐயங்கார் பிரிவினர். எனவே நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம். ரொம்ப ஆச்சாரமாக இருப்போம் என்றும் தன்னுடய பெற்றோர் மிகவும் வயதானவர்கள். தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். எனவே தனிக் குடித்தனம் வரமுடியாது என்று சில கண்டிஷன் போடுகிறான். ராதாவும் குடும்பத்துடன்தான் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு ஒத்துக்கொண்டு மிக எளிதாக திருமணம் நடக்கிறது. 

வேலையும் விட சொல்கிறார்கள். அம்மா வீடு அதே சென்னையில் இருந்தாலும் அடிக்கடி போகக்கூடாது என்று வேறு சொல்லி விடுகிறார்கள். திருமணம் ஆகி போன நாளிலிருந்து வீட்டில் மாமியார் மிகவும் கெடுபிடி என்று புரிந்து கொள்கிறாள். அன்பாக பேசுவதே இல்லை. சமையல் அறையில் அவளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. குளித்த பின்னரே தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று உத்தரவு வேறு. மாமனார் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் போய் வர இருக்கும்போது மறைமுகமாக குத்திக் காட்டுவது என்று இருக்கிறது. காரணம், சாதி பிரிவில் தன்னை விட ஐயர் பிரிவினர் தனக்கு கீழே என்ற போக்கிலே அவளை நடத்துகிறார்கள். இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடியக்கூடாது என்று இவள் பொறுத்துப் போகிறாள். 

அந்தப் பெண்ணுக்கு, அளவான சாப்பாடே போடப்படுகிறது. மேலே பசித்தாலும் கிட்சனில் அனுமதி இல்லை. வெளியே வாங்கி கொள்ளவேண்டும் என்று கேட்டாலும், கணவன் அம்மாவிடம் பணம் கேட்டு கொள் என்கிறான். வீட்டிலே அடைந்து கிடக்க வேலைக்கு போக அனுமதி கேட்டதும் முதலில் கிடைக்கவில்லை. இவள் பார்க்கும் பார்மஸி வேலை சென்னையில் கிடைக்கவில்லை. ஒருநாள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் வீட்டை பூட்டி விட்டு குடும்பமாக சென்று விட்டு நெடு நேரம் இவளை வாசலிலே நிற்க வைத்து விடுகின்றனர். இதுபோல இனி நடக்காமல் இருக்க இன்னொரு சாவி மாமியாரிடம் கேட்டபோது அது இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாக ஆனது. இவள் மாதாந்திர மாதவிலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே அனுமதி இல்லை. அதனுடன் வேலைக்கு சென்று விட்டு வந்து இவர்கள் போடும் கண்டிஷனில் சிரமமாக தான் வாழ்கிறாள்.

பொறுக்க முடியாமல் இயலாமையால் இது போலதான் முதல் மனைவியையும் நடத்தினீர்களா? அதான் சென்றுவிட்டாளா? என்று கேட்டு விட, கணவன் தன் அம்மாவை எப்படி இது போல பேசலாம் என்று பேச்சாகி விட்டது. கணவனிடம் எதிர்பார்த்த அன்பு, அக்கறை எல்லாமே போய்விட்டது. இப்படியே ஒரு வருடம் போனது. பெங்களூரில் வேலை கிடைக்க சனி, ஞாயிறு மட்டுமே வீட்டிற்கு வருகிறாள். வந்திருக்கும் ஒருநாளில் சேர்த்து வைத்து கொடுமைகள் காட்டப்படுகிறது. கணவனிடமும் வாழ விடுவதில்லை. 

அந்தச் சமயம் எதிர்பாராதவிதமாக முதல் மனைவியின் சொந்தக்காரர் ஒருவரை, ராதா பெங்களூரில் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறாள். ஒருவரை ஒருவர் யார் என்று பகிரும்போது அவளுடைய கணவனின் முதல் மனைவியின் சொந்தக்காரர் என்று சொல்லி அந்த மாமியார் சேர்ந்து வாழவே விடமாட்டாள் என்கிறார். நாங்கள் கடைசியில் நாற்பது லட்சம் கொடுத்தோம் என்று சொல்லவும் இவளுக்கு பெரிய அதிர்ச்சி. எனவே சேர்ந்து வாழ வேண்டும் என்று பெட்டிஷன் போட்டு தனியாக வாழ வேண்டும் அல்லது வாரம் ஒரு முறை பெற்றோர் பார்க்க வரலாம் என்று கேட்டு பார்க்கிறாள். 

இந்தத் திருமணத்தை தக்க வைத்து கொள்ள பார்க்கிறாள். ஆனால் கணவன் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இருக்கிறான். மேலும், அவள் பயணம் செய்து வேலை பார்த்து திரும்புதலை காட்டி அவள் நடத்தையை சந்தேகமாக பேசுகிறான். நாங்கள் நிரந்தர ஜீவானாம்சம் கேட்டு பார்த்தோம். ஒரு பைசாக்கு கூட மறுத்தார்கள். இந்தப் பெண் வழக்குக்காக, பெங்களூரிலிருந்து சென்னை வந்து ரயில் நிலையத்தில் குளித்து என்று ரொம்ப சிரமப்பட்டாள். கவுன்சிலிங் வைத்தபோது கூட கணவன் தன் பெற்றோரைக் கூட்டி வரவில்லை. மீடியேஷன் போட்டு இறுதியாக ஐந்து லட்சம் ஒத்துக் கொண்டார்கள். ம்யூச்சுவல் கன்செண்ட் போட்டு கடைசியாக விவாகரத்து ஆனது.