Skip to main content

டி20 உலகக் கோப்பை தொடர் : இறுதிப் போட்டியில் இந்திய அணி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
T20 World Cup Series: Indian team in the final

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், துபே, பாண்ட்யா, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ரன் குவிக்க முடியாமல் விராட் கோலி தடுமாறி வரும் நிலையில் நேற்றைய போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடி இந்தியாவின் ரன்களை உயர்த்தினர். ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்தனர். 

T20 World Cup Series: Indian team in the final

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது . 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அக்ஸர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் நாளை (28.06.2024) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. முன்னதாக 2007 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பை இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தது. 

T20 World Cup Series: Indian team in the final

முன்னதாக நேற்று காலையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிர்க்கெட் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Next Story

“விடைபெறுகிறேன்...” - ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
“Farewell...” - Ravindra Jadeja Announces Retirement!

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (29.06.2024) நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார். முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திர ஜடேஜா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி நிரம்பிய இதயத்துடன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது என்ற கனவு நனவானது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்'-நடராஜன் நெகிழ்ச்சி

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 'I felt like I was on the field too' - Natarajan

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியோடு மோதிய இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. பார்படாசில் நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களையும், அக்சர் படேல் 47 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் அடித்தனர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியில் ஹர்திக் மூன்று விக்கெட்டுகளையும், பும்பரா, ஹர்ஷித் சிங் தலா இரண்டு விக்கட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் சாலையில் கூடி நின்று பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, 'போட்டியில் இதயத்துடிப்பு எகிறிய போதும் வீரர்கள் நம்பிக்கை உடன் செயல்பட்டனர். இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது என அணி வீரர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். கடைசி வரை பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. அதேநேரம் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 'I felt like I was on the field too' - Natarajan

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 'ஒவ்வொரு தருணமும் மிக முக்கியமாக இருந்தது. நானும் மைதானத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது' என தெரிவித்துள்ளார்.