Skip to main content

அணியின் தவறுக்கு டார்கெட் செய்யப்படுகிறாரா தினேஷ் கார்த்திக்?

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

 

 

d

 

நியூசிலாந்தில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பு இருந்தும் தன்னுடைய ஓவர்-கான்பிடன்ஸ் காரணமாக சிங்கிள் எடுக்க மறுத்தார். போட்டியின் முடிவில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை இழந்தது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் அந்த செயல்பாடு ரசிகர்களாலும், முன்னாள் வீரர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

3-வது டி20 போட்டி நடைபெற்ற ஹாமில்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்று. இருப்பினும் 213 ரன்களை எந்த ஒரு மைதானத்திலும் 20 ஓவர்களில் சேசிங் செய்யும்போது ஒரு சிறிய தவறும் அணியின் வெற்றியை பாதிக்கும். தவான் 4 பந்துகளில் 5 ரன்கள், தோனி 4 பந்துகளில் 2 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் சங்கர், ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் இன்னிங்ஸின் முதல் பாதியில் அதிரடியில் அசத்தினர். 

 

 

dd

 

மிடிலில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினார். 14 ஓவர்கள் ஒரு முனையில் பொறுமையாக ஆடிய ரோஹித் ஷர்மா அதிரடியை தொடங்கும்போது அவுட் ஆனார். இறுதியில் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா ஆகியோர் 28 பந்துகளில் 68 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை சேசிங் செய்தனர். இறுதிவரை முயன்றும் நூலிழையில் மிஸ் செய்தனர்.

 

 
முதல் 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்த இந்திய அணி, அடுத்த 38 பந்துகளில் 50 ரன்களை மட்டுமே எடுத்தது. மேலும் ஆட்டத்தின் இந்த கட்டத்தின்போது பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்மா, தோனி உள்ளிட்டோரின் விக்கெட்களை இழந்தது. இந்த மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும், முக்கிய விக்கெட்களையும் சரியான விகிதத்தில் கன்ட்ரோல் செய்ய தவறியது. இதுதான் ஆட்டத்தில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு. 

 


ஒருவேளை தினேஷ் கார்த்திக் சிங்கிள் ரன் எடுத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அனுபவம் வாய்ந்த பவுலர் சவுதி மிகவும் நேர்த்தியாக பல வேரியேஷனில் அசத்தலாக வீசினார். 18-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகள் பறந்தாலும் அடுத்த மூன்று பந்துகளையும், கடைசி ஓவரையும் தன் பவுலிங் ஸ்கில் மூலம் அற்புதமாக வீசினார். இந்த நிலையில் எப்படிப்பட்ட பேஸ்ட்மேனுக்கும் அது கடினமான தருணம்தான். உலகின் பெஸ்ட் பினிஷர் என்று பெயர் எடுத்த தோனி பினிஷிங் செய்ய முடியாமல் போன இன்னிங்ஸ்கள் உண்டு. ஆனால் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க தவறியதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்பதுபோல பேசப்பட்டு வருகிறது. 

 

செய்தத் தவறை உணர்ந்த கார்த்திக் உடனடியாக மைதானத்திலேயே குருனால் பண்டியாவிடம் தனது தவறை ஒப்புக்கொண்டார். டி20 போட்டிகளில் சேசிங்கின்போது தினேஷ் கார்த்திக் நாட் அவுட்டாக இருந்து தோற்ற முதல் போட்டி இதுதான் என்பது கவனிக்கத்தக்கது. வங்கதேசம் அணிக்கு எதிராக 2018-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 12 பந்துகளுக்கு 34 ரன்கள் என்ற கடின இலக்கை சேசிங் செய்து மாஸ் காட்டினார். இதுபோல பல போட்டிகளில் இறுதி கட்டங்களிலும், மிடிலிலும் சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். அவர் சிறு தவறு செய்யும் போதெல்லாம் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். ஆனால் சிறப்பாக ஆடும்போது பெரிய அளவில் பாராட்டப்படுவதில்லை.

 

 

dd

 

தினேஷ் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல பார்மில் உள்ளார். 16 டி20 இன்னிங்ஸில் 29௦ ரன்கள், பேட்டிங் சராசரி 50+, ஸ்ட்ரைக் ரேட் 155+. 11  முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு விளையாடிய 20 ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக ஆடியுள்ளார் கார்த்திக். 17 இன்னிங்ஸ்களில் 425 ரன்கள் குவித்துள்ளார். 8 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன்.  

 

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றபோது அணியில் இருந்தவர் கார்த்திக். அந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையின்போது ஸ்மித்தின் கேட்ச்சை அட்டகாசமாக பிடித்தார். பீல்டிங்கில் அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வென்றது.  

 

எம்.எஸ்.தோனிக்கு முன்பிருந்தே இந்திய அணியில் இருப்பவர் தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகளில் 2004-ஆம் ஆண்டு முதல் இன்று வரை அணியில் விளையாடி வருகிறார். இன்று விளையாடிவரும் இந்திய அணியில் சீனியர் வீரர் இவர்தான். இவருடைய திறமை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.

 

 

 

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

CSK vs RCB: ராவத் - தினேஷ் இணை அதிரடியால் பெங்களூரு ரன்கள் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
CSK vs RCB ipl latest live score update

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.

தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.  இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது.  கோலி 21 ரன்களுக்கும்,  கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர்.  மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத்  48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.