Skip to main content

இன்னும் கோலி கேப்டனாக இருப்பது அவரின் அதிர்ஷ்டம்...!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

தோனி, ரோஹித் சர்மா ஆகியோருடன் ஒப்பிடுகையில் கோலி கேப்டன்ஷிப்பில் இன்னும் வெகு தூரம் கடக்க வேண்டியுள்ளது. தோனி, சர்மா ஆகியோர் 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர். 2013-ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக உள்ள கோலி இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இருந்தாலும் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியிலிருந்து விலக்காமல் வைத்துள்ளது. இதற்காக கோலி பெங்களூர் அணி நிர்வாகத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கம்பீர் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி விமர்சித்துள்ளார். 

 

csk

 

ஐ.பி.எல். தொடரில் தோனிக்கு அடுத்தபடியாக கேப்டன்ஷிப்பில் சிறந்து விளங்கியவர்கள் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா. கம்பீர் தலைமையில் இரண்டு முறை கொல்கத்தா அணி கோப்பையை வென்றுள்ளது. கேப்டன்ஷிப்பில் வீரர்களை பயன்படுத்தும் முறையில் கோலி சரியாக செயல்படாமல் இருந்து வருகிறார். டி வில்லியர்ஸ், கெயில், வாட்சன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் ஒருமுறைகூட கோலி தலைமையில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லவில்லை. 
 

கோலி பெங்களூர் அணியை வழிநடத்துவதற்கு முன்பு 5 தொடர்களில் 3 முறை ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதில் 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் கடந்த 6 ஆண்டுகள் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் கோலி. இதில் இரண்டு முறை மட்டுமே ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒருமுறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியடைந்துள்ளது. கோலி தலைமையில் ஆர்.சி.பி.அணி 96 போட்டிகளில் 44 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் கோலியின் கேப்டன்ஷிப் மீதான விமர்சனம் அதிகமாக உள்ளது. 

 

virat

 

உலகக்கோப்பை தொடரில் நான்காவது வரிசை வீரராக ராயுடு ஒருவழியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா  தொடரில் சொதப்பியதால் அந்த இடத்தில் யாரை களமிறக்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யாமல் உள்ளது இந்திய அணி நிர்வாகம். இந்த நிலையில் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர். 
 

தோனி, தவான் ஆகியோர் ஒரு வருடமாக ஃபார்மில் இல்லாதபோது ஃபார்முக்கு வரும் வரை அவரை அணியில் விளையாட வைத்தனர். ஆனால் ராயுடு கடந்த ஒரு தொடரில் மட்டுமே சொதப்பியதால் அவருக்கு அடுத்த வாய்ப்பு தராமல் பாரபட்சம் காட்டுகிறது அணி நிர்வாகம். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு வரை சிறப்பாக விளையாடி வந்தார் ராயுடு. ராயுடுவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்ற வீரர்களுக்கு ஏன் எடுக்கப்படவில்லை என்றும் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பாரபட்சம் காட்டுவதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

virat

 

இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி தான். மீதிதான் கோலி. தோனி தான் அணியை வழிநடத்தி, கிட்டத்தட்ட இந்திய அணியின் பாதி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி சமீபத்தில் கூறியிருந்தார்.
 

தோனி விளையாடும் போட்டிகளில் கடைசி டெத் ஓவர்களில் பீல்டிங் அமைக்கும் பொறுப்பை தோனியிடம் கொடுத்துவிட்டு, பவுண்டரி லைனில் பீல்டிங் நிற்கிறார் கோலி. தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நிற்பதால், அவர் எதிரணியின் வியூகங்களை எளிதாக புரிந்து கொள்கிறார். தோனி இருப்பதால் கோலிக்கு பெரிய நெருக்கடி இல்லை. கோலிக்கும் தோனிக்கும் இடையிலான புரிந்துணர்வு, சரியான முடிவை எடுக்க உதவுகிறது என்று கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.