Skip to main content

நாசாவிடம் கோரிக்கை வைத்த பெங்களூர் அணி... கிண்டல் செய்த ரசிகர்கள்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசாவிடம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் நக்கலான உதவி ஒன்றை கேட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை பெங்களூரு அணி கோப்பை வென்றதேயில்லை. இதற்கிடையில் விக்ரம் லேண்டரை மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் கொடுத்த தகவல் மூலம் நாசா கண்டுபிடித்தது. இந்நிலையில் இதைப்பார்த்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் நாசாவிடம் வேடிக்கையான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.



இதுதொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா அணி அப்படியே எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க, டிவிலியர்ஸ், விராட் கோலி ஆகியோர் அடித்த பந்தை கண்டுபிடித்து கொடுங்கள்" என குறிப்பிட்டுள்ளது.பெங்களூரு நிர்வாகத்தின் இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான ரசிகர்கள், பந்தை தேடுவதற்கு முன்பாக பெங்களூரு அணி எப்படி வெற்றி பெற வேண்டும் என சொல்லிக்கொடுங்கள் என கலாய்த்து வருகின்றனர்.