Skip to main content

யுவராஜ் சிங் சிஎஸ்கே-வுக்கா? சிஎஸ்கே-வின் பிளான் என்ன?

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

ஒருபக்கம் ஐ.பி.எல். மைதானத்தின் பார்வையாளர்கள் பகுதியில் விசில் சத்தங்கள், டிரம் அடித்தல், “சி.எஸ்.கே. சி.எஸ்.கே. சி.எஸ்.கே.” மந்திரச் சொற்கள், “தோனி தோனி தோனி” கோஷங்கள் என உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் ரசிகர்கள்; மறுபக்கம் மைதானத்தில் ரெய்னாவின் சிக்ஸர்கள், தோனியின் அசத்தல் கேப்டன்ஷிப், பிராவோவின் ஆல்-ரவுண்ட் ஸ்கில், டூ பிளசிஸ் மற்றும் ஜடேஜாவின் டைவ் பீல்டிங் என ரசிகர்களின் உற்சாகத்தை சற்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளும் சி.எஸ்.கே. வீரர்கள். இப்படி ஒரு ஆதரவும், எதிர்பார்ப்பும் எந்தவொரு உள்ளூர் டி20 அணிக்கும் இருக்காது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

 

cc

 

 

இங்கிலாந்தின் மார்க் வுட், கனிக்ஸ்க் சேத் மற்றும் கிஷித்ஸ் ஷர்மா என்ற இளம் உள்ளூர் வீரர்கள் ஆகியோரை விடுவித்துவிட்டு 2018-ல் அணியில் இருந்த மற்ற பழைய வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே. அணி. ஐ.பி.எல். 2019 வீரர்கள் விடுவிப்பின்போது, மிகவும் குறைந்த வீரர்களை விடுவித்த அணி சி.எஸ்.கே.  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்தியாவை சேர்ந்த 15 வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் 8 பேரென தற்போதைய அணியில் 23 வீரர்கள் உள்ளனர். இன்னும் இரண்டு வீரர்களை ஏலத்தின்போது சி.எஸ்.கே. வாங்கலாம். ஆனால் உள்நாட்டு வீரர்களை மட்டுமே வாங்க முடியும். ஏனெனில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் ஏற்கனவே அணியில் நிரம்பிவிட்டது. இன்னும் சென்னை அணியின் பர்ஸில் எஞ்சியிருப்பது ரூ. 8.40 கோடி.

 

எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸ், ஷேன் வாட்சன், ரவிந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், இம்ரான் தஹிர், டேவிட் வில்லி, பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், லுங்கி நெகிடி, கேதர் ஜாதவ், கரன் ஷர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த அணியே மிகவும் பலம் பொருந்திய வலுவான அணிதான். ஆனால் இன்னும் சில முன்னேற்றம் காண வேண்டிய இடங்கள் உள்ளன. 

 

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் யுவராஜ் சிங் சென்னை அணியில் விளையாட வேண்டும் என ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் மும்பை அணி யுவராஜ் சிங்கை வாங்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் யுவராஜ் சிங்கை வாங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. இதற்கு காரணம் அவருடைய கடந்தகால ஐ.பி.எல். ஸ்கோர்கள் மற்றும் அவரது ஃபிட்னஸ். 

 

ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை உள்நாட்டு வீரர் தீபக் சஹார் மிகவும் அருமையாக விளையாடினார். ஆனால், ஷர்டுல் தாகூர் விக்கெட்கள் எடுத்தாலும் எக்னாமி ரேட் 9+ என வைத்துள்ளார். மேலும், இங்கிலாந்தின் மார்க் வுட் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே ஒரு ஃபாஸ்ட் பவுலர் அணியின் முதன்மை தேவையாக உள்ளார். ஜெயதேவ் உனட்கட், ராஜ்னிஷ் குர்பானி, முஹம்மது சமி, மொஹித் ஷர்மா, வருண் ஆரோன் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முற்படும்.   

 

ஜெயதேவ் உனட்கட் சென்றமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ. 11.50 கோடியில் வாங்கப்பட்டார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. 15 ஆட்டங்களில் அவர் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். ஐ.பி.எல். 2019 ஏலத்திற்கு முன்னதாக அவர் விடுவிக்கப்பட்டார். அவரது தற்போதைய அடிப்படை விலை ரூ. 1.5 கோடி. அனுபவம் மிகுந்தவர், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர். சென்றமுறை ஏலத்தின்போது இவரை எடுக்க கடைசி வரை முயன்றது சென்னை அணி. இந்த முறை இவரை வாங்க முழுமுயற்சிகளையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

வலுவான ஸ்பின், அசத்தல் ஒப்பனிங், நல்ல மிடில் ஆர்டர் என மற்ற துறைகள் சிறப்பாக உள்ளன. இருப்பினும், யாருக்காவது அடிபட்டால் பேக்-அப் வீரர்கள் தேவை. ஒரு ஃபாஸ்ட் பவுலரை தவிர, ஒரு பேக்-அப் பேட்ஸ்மேன் அல்லது பேக்-அப் பவுலரை வாங்க சென்னை அணி முயற்சிக்கும். வருண் சக்கரவர்த்தி, அக்ஸர் படேல், விஹாரி, மனன் வோஹ்ரா, முருகன் அஸ்வின், பிபுல் சர்மா, அங்கித் ஷர்மா, அன்மோல்ஃபீத் சிங், விராத் சிங், ஷிபம் துபே ஆகியோர் சென்னை அணியின் பார்வையில் இருக்கும் வீரர்கள். 

 

 

c

 

 

2018 ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தின்போது 30+ வயதுடையவர்களை அதிகம் எடுத்தது சி.எஸ்.கே. அணி. அணியின் இந்த திட்டத்தை மற்ற அணி ரசிகர்கள் பலர் ட்விட்டரில் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், ஐ.பி.எல்.கோப்பையை சி.எஸ்.கே. வென்று அசத்தியது. வயது முக்கியமல்ல, ஃபிட்னஸ்தான் முக்கியம் என்பதை உறுதிப்படுத்தியது. ஃபிளெமிங் மற்றும் தோனி கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக இருந்து வருகிறது. ஏலத்தில் சென்னை அணியின் திட்டம் சில ஆச்சரியங்களை கொடுக்கலாம்.

 

தக்கவைக்கப்பட்ட சி.எஸ்.கே. அணி வீரர்கள்:

கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பிராவோ, கரன் ஷர்மா, ஷேன் வாட்சன், ஷர்டுல் தாகூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூ பிளெசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கிணினி நிக்டி, கே.எம்.ஆசிஃப், என்.ஜகதீசன், மோனு சிங், துருவ் ஷோரி, சைய்தேன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி, மிட்செல் சாண்ட்னர்.

 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.