Skip to main content

ரயில் எத்தனை மணிக்கு...

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

பதற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதாவது ஏற்படக்கூடியதே. ஆனால் எப்போதுமே ஏற்பட்டால் அது மிக மோசமான விளைவுகளைக் கொடுத்துவிடும்.பதறிய காரியம் சிதறும்’ என்பார்கள். எந்தவொரு செயலையும் அது எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும் நிதானமாக யோசித்து செய்ய வேண்டும். அவசர அவசரமாகச் செய்தால் அதனால் வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஏழு மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்ல எவ்வளவு நேரமாகும்? செல்லப்போவது காரிலா, டூ வீலரிலா, ஆட்டோவிலா, மாநகரப் பேருந்திலா என்பதை முன்னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ரயில் நிலையம் செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்றால் நீங்கள் நிச்சயமாக ஐந்தரை மணிக்கே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். முடிந்தால் ஐந்து மணிக்கே கிளம்பலாம் தப்பில்லை.

train images

ஏழு மணிக்குத்தானே  என்று நினைத்துக் கொண்டு வீட்டில் இருந்து ஆறு மணிக்குப் புறப்படுவார்கள். அதற்கு முன்னதாக எதில் செல்ல வேண்டும் என்றும் தீர்மானித்திருக்க மாட்டார்கள்.  அப்போதுதான் ஆட்டோ கிடைக்கிறதா, கால் டாக்சி கிடைக்கிறதா, பேருந்து வருகிறதா என்று பரபரப்பாகத் தேடுவார்கள்.  சொந்த வாகனமாக இருந்தால் டயரில் காற்று குறைவாக இருப்பது அப்போதுதான் நினைவிற்கு வரும்.இப்படிப்பட்டக் கூத்துகளால் ஒன்று ரயிலைக் கோட்டை விட்டுவிடுவார்கள். அல்லது வழியில் சிக்னலில் மாட்டிக் கொண்டு டென்ஷன் ஆவார்கள். இல்லையென்றால் இருக்கிறவர்களை எல்லாம் சீக்கிரம், சீக்கிரம் என்று விரட்டோ விரட்டென்று விரட்டி டென்ஷன் பண்ணுவார்கள். எதற்காக இப்படிப் பதற்றமடைய வேண்டும்? நிதானமாக யோசித்தால் இந்தப் பிரச்சனையைச் சந்திக்காமல் தவிர்த்திருக்க முடியும் அல்லவா!.

இரண்டு எலிகள் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. ஒருநாள் இரவு இரண்டுக்கும் நல்ல பசி. ஏதாவது கிடைக்கிறதா என்று அவை ஒளிந்து கொண்டிருந்த சமையலறையில் தேடின. ஒரு பானையில் பால் இருந்தது. ஆனால் அது உயரமானதாக இருந்ததால் பாலைப் பருக முடியாமல் இரண்டும் திண்டாடின. ஒரு யோசனை தோன்றியது. ஒரு எலியின் மீது ஏறி இன்னொன்று பாலைக் குடிப்பது என்றும், பாதிக்கு மேல் இன்னொரு எலியின் மீது ஏறி மற்ற எலி பாலைப் பருகுவது என்றும் முடிவு செய்து கொண்டன. அவ்வாறே முதலில் ஒரு எலி பாலைக் குடித்தது. அதற்கு முதுகைக் கொடுத்துக் கொண்டிருந்த எலிக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது. பால் முழுவதையும் அதுவே குடித்துவிட்டால் என்ன செய்வது என்று பதற்றம் ஏற்பட்டது.போதும், போதும். அடுத்தது நான் குடிக்க வேண்டும் என்று பதற்றத்தில் பெருங்குரலில் கத்தியது.

work tension

திடீரென்று கீழே இருந்த எலி கத்தியதும் அது பதறிப்போய் மிரண்டது. இதனால் பால் பானைக்குள் தவறி விழுந்துவிட்டது.இதைப் பார்த்த இந்த எலிக்கு இப்போது ஒரே சந்தோஷம். பானையில் உள்ள பால் முழுவதும் இனிமேல் தனக்குத்தான் என்று மகிழ்ந்தது. ஆனால் அந்தப் பாலை எப்படிக் குடிப்பது என்று தெரியாமல் பானையையே சுற்றிச் சுற்றி வந்தது. பானையில் ஏறவே முடியவில்லை.கடைகியில் பசி தாங்க முடியாமல் செத்துப் போனது.பதறினால் நிலைமை இப்படித்தான் வந்து முடியும். பொறுமை யாக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? யோசிக்க வேண்டும். எப்போதும், எந்த நேரத்திலும் பதற்றம் அடையவே கூடாது. அது உங்களின் உயிர்க்கொல்லி என்பதை உணர வேண்டும். அது உங்களின் ஜென்ம விரோதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.