Skip to main content

வயிற்றுப்போக்கை குணமாக்க ….

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவதாலும்  ,சுகாதாரம் இல்லாத நீரைக் குடிப்பதாலும் மற்றும் சில காரணத்தினால்  வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன . இதை சரி செய்ய சில வகையான உணவு முறைகளை பின்பற்றினால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைகளை சரி செய்யலாம் .எந்த மாதிரியான உணவு வகைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம் .சுக்கு ஒரு தேக்கரண்டியுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், பட்டை, சிறிது தேன் சேர்த்து குழப்பி, தினமும் 3 வேளை சாப்பிட்டு வரவும்.

 

stomach pain relief

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகம், கொத்தமல்லி சாறு, சிறிது உப்பு சேர்த்து உணவிற்கு பின் இரண்டு வேளை, 2-3 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுபோக்கு குணமாகும்.3 பூண்டு பல்லை மசித்து ஒரு கிளாஸ் அளவு பாலில் கொதிக்கவிட்டு தினமும் இரவு குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.முதல் நாள் இரவு 3 தேக்கரண்டி அளவு தனியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தனியா விதைகளை சாப்பிட்டு ஒரு கப் மோர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.15-20 கருவேப்பிலை இலைகளை அரைத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

கொய்யா இலைகளை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் 3 வேளை குடித்து வர வயிற்றுபோக்கு தீரும்.1/2 கப் இனிப்பான மாம்பழ சாறுடன் 25 கிராம் தயிர், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, தினமும் 2 அல்லது 3 வேளை குடித்து வர வயிற்று போக்சூ நிற்கும்.5 நெல்லிக்காய் சாற்றுடன் திராட்சை பழசாறு சிறிது கலந்து குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.மாதுளம் பழத்தோலும் பூவும் வகைக்கு ஒரு அவுன்சு எடுத்து, அவற்றை ஒரு லிட்டர் தண்ணீரிலே போட்டுக் காய்ச்சிக் கால் லிட்டராக வற்றவைத்து வடிகட்டி, அந்த கஷாயத்தை ஒரு தடவைக்கு ஓர் அவுன்சு வீதம் காலை, மாலை, இரவு மூன்று வேளைகளிலும் பருக வேண்டும்.நாவல் பழத்தின் சாற்றோடு சிறிது பனைவெல்லமும் பன்னீரும் சேர்த்து அருந்தினால், இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் எனவே உடலில் வரக்கூடிய பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் .
 

Next Story

‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் - முதல்வர்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
We will act responsibly to achieve the goal of Accident Free Tamil Nadu CM

இந்தியாவில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைப் பாதுகாப்பு மாதம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் அனைவரின் கடமையாகும். நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது.

சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.

சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தனி மனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புறச்சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தற்போதைய மற்றும் வருங்கால சாலை உபயோகிப்பவர்களிடையே பாதுகாப்பான சாலைப் பயனாளர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும். 

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம் : நம்மைக் காக்கும் 48’ என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில், அரசானது வாகனத்தை இயக்கிவரும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். சாலை விதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே; விதிகளை மதிப்போம், வேதனைகளைத் தவிர்ப்போம்; சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.