Skip to main content

ஏழைகளின் மாஸ்க்...  கற்றுத் தரும் கிராமத் தொழிலாளி

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகையே உயிர் அச்சத்திலும் நடுக்கத்திலும், பதற்றத்திலும் வைத்திருக்கிறது மனிதப் படுகொலைகளை நடத்தும் சராஸ்- கரோனா எனப்படும் கோவிட்-19. கண்ணுக்குப் புலப்படாத நீக்கமற நிறைந்திருக்கும் அந்த ஆட்கொல்லி வைரஸை நினைத்து உறக்கத்தையும் பறிகொடுத்துத் தவிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் இந்தக் கொடிய வைரஸ் என்று இந்தப் பிரபஞ்சத்தைவிட்டு எப்போது அகலுமோ என்று விடை தெரியாததே.

 

 The Mask of the Poor ... Teaching Village Worker


இருப்பினும் தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவ உலகமும், தனித்திரு, விலகியிரு, விழித்திரு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி மக்களைக் கடைபிடிக்க வைத்ததுடன் வெளியயே செல்லும் போது முகக்கவசம் எனும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது தற்காப்பு கவசம் என்றும் அறிவித்ததால் தற்போது வெகு ஜனங்கள் மாஸ்க் அணிந்தபடியே தேவையின் பொருட்டு வெளியே வருகின்றனர்.

ஆனாலும் மாஸ்க் தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் தாறுமாறாகப் போய்விட்டது. நகரத்தாருக்குச் சாத்தியமாகும் இந்த மாஸ்க், சாமான்ய மக்களான கிராமத்து மக்களுக்கு அது ஆகாயத்தில் பறக்கும் பொருளானதால், தங்களைத் தற்காத்துக் கொள்ள மாற்று வழியை மேற்கொண்டிருப்பது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

 

 The Mask of the Poor ... Teaching Village Worker


அந்த அதிசயம் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரம் எனும் கிராமத்தில் தான் அரங்கேறியிருக்கிறது. அங்கேயுள்ள பனைத்தொழிலாளியான குணசேகரனும், அவர் மனைவி முருகலட்சுமியும் தான் அந்த ஏழைகளின் காப்பானைக் கண்டு பிடித்துள்ளனர். வல்லவனுக்கு கொரோனாவைத் துரத்தியடிக்க புல்லும் ஆயுதம் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

உரமேறிய உடம்பு. காய்த்துப் போன நெஞ்சும் கைகளும். உடம்பு சட்டையைப் பார்த்து பல காலமாகும் போல. எந்நேரமும் காந்தியைப் போன்று உடலில் சட்டையே இல்லாமல் பனைத் தொழிலைச் செய்து வருபவர் குணசேகரன். உறுதுணையாக அவர் மனைவி.

 

 The Mask of the Poor ... Teaching Village Worker


தற்போது கோடைகாலம். பனைத் தொழில் ஆரம்பகட்டம். இந்தத் தொழிலைக் கொண்டு தான் தம்பதியரின் வண்டிச் சக்கரம் சுற்றுகிறது. இன்னும் நான்கு மாதங்கள் தான் பனைத் தொழிலுக்கு ஏற்ற காலம். இப்போதே பனை ஏறி பக்குவப்படுத்தி பாளையைச் சீவிவிட்டால்தான் பதநீர் இறக்கி அதைக் கொண்டு கருப்பட்டி தயாரிக்க முடியும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது காய்த்து தூர்ந்து விடும். பிறகு பிழைப்பில் கரையான் ஏறிவிடுமே. அதற்காகத்தான் பரபரத்தார் பனைத் தொழிலாளி குணசேகரன்.

 The Mask of the Poor ... Teaching Village Worker


இந்தத் தொழிலைச் செய்து முடிக்கப் பல மணிநேரம் ஆகலாம். உலகமே கரோனா பயத்திலிருக்க முக கவசத்திற்காக வேறு எங்கும் அலையவில்லை. ஈரம் தாங்கும் அந்தப் பணை ஓலையை முக கவசமாக  வளைத்துப் பின்னி மாட்டிக்கொண்டு துணிச்சலோடு தம்பதியர் கருப்பட்டி காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.

 

 The Mask of the Poor ... Teaching Village Worker

 

எங்களுக்கெல்லாம் முகக்கவசம் பத்தி தெரியாது. அது இருக்குற எடமும் புரியாது. அதுக்கு வசதியுமில்ல. வேற வழி யோசிச்சப்ப, பனை ஓலையை பதநீர் குடிக்க மடக்குறாப்புல முகத்துக்கு ஏத்ததா வளைச்சிப் பின்னி மாட்டிக்கிட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டோம். ஒரு வாரமா யிப்படித்தேன் வேலை ஓடுது. ஆனா பாருங்க இயற்கைத் தயாரிப்பு. பனங்குறுத்து வாசனை இதமாயிருக்கும். எந்தக் கிருமியும் அண்டாது ஒட்டாது. சரியான பாதுகாப்பு. போட்டதயே மறுபடியும் போட வேண்டாம். தினமும் ஓலைய மடிச்சி கவசமாக்கிறலாம். சர்வ சாதாரணமாகச் சொன்னார் பனைத் தொழிலாளியான குணசேகரன்.

ஒரு சாமான்யன் கற்றுத்தந்த பாடம் இது.

 

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.