Skip to main content

பிரிந்த தம்பதியர் சேரும் காலம் எப்போது? பரிகாரம், தீர்வு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

ன்று சமுதாயத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்துவேறுபாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் 19 வயதுமுதல் 75 வயதுவரையுள்ளவர்கள் மனவேதனையை அனுபவிக்கிறார்கள். திருமணம் முடிந்து ஒரு மாதம்முதல் அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் ஜோதிடரையும், வக்கீலையும் அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி பிரிந்துவாழக் காரணம் என்ன? அவர்களை சேர்த்துவைக்க முடியுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

couplesகணவன்- மனைவி பிரிவினை ஏற்படஜோதிடரீதியான காரணங்கள் தம்பதிகள் இருவரது ஜாதகத்திலும் ஜாதகரை வழிநடத்ததும் உயிர் மற்றும் உடலாக செயல்படக்கூடிய லக்னம், ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழக்காமல் திரிகோண சம்பந்தம் பெறவேண்டும். திரிகோண சம்பந்தம் இல்லாவிட்டாலும் 6, 8, 12 ஆக இருக்கக்கூடாது.

திருமணம் தொடர்பான ஸ்தானங்களான ஒன்றாம் இடமான லக்னம், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடம் ஆகிய ஸ்தானங்களும், அதன் அதிபதிகளும் வலிமையுடன் இருக்கவேண்டும். இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் அல்லது மறைவிட அதிபதிகளின் சம்பந்தமில்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதன் அதிபதிகள் நீசம், பகை, வக்ரம், மறைவு, அஸ்தமனம் அடையாமல்- மறைவிட அதிபதிகள் சம்பந்தம் அல்லது பாவகிரகங்களின் சம்பந்தமில்லாமல் இருக்கவேண்டும். மிகக்குறிப்பாக 7-ஆம் அதிபதி பகை, நீசம், அஸ்தமனம் பெறாமல் இருக்கவேண்டும்.

ஷட்பல நிர்ணயத்தில் 7-ஆம் அதிபதி வலிமையுடன், 3, 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தமில்லாமல் இருக்கவேண்டும்.

6, 8, 12-ஆம் அதிபதிகளின் தசாபுக்திக் காலங்களில் பிரிவினை ஏற்படுவதைத் தவிர்க்க, தசாசந்திப் பொருத்தம் மிகவும் முக்கியம். ராகு- கேதுக்களின் தசாபுக்தி நடந்தாலும் மிக கவனமாகப் பொருத்தவேண்டும்.

7-ஆம் அதிபதியின் சாரநாதன் வலிமையிழந்து நிற்பது, பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு- கேது சம்பந்தம், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு- கேது சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பெண் ஜாதகத்தின் சுக்கிரனுக்கும், ஆண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் சம்பந்தம் இருக்கவேண்டும்.

தவறான திருமணப் பொருத்தம்

தம்பதிகளின் ஜீவனகாரகன் குருவும், கர்மகாரகன் சனியும் மற்றவருக்குப் பொருந்தும்விதமாக அமையும்போது, திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நெருக்கடி வராது. ராகு- கேது, செவ்வாய் தோஷத்தால் கருத்துவேறுபாடு வராமல் பொருத்தவேண்டும்.

சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருப்பவர்களுக்கு மாமியா ரால் டார்ச்சர் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். மாமியாரால் பிரச்சினையை அனுபவிக்கும் எல்லாருடைய ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருக்கும். இதற்குத் தம்பதி யினரின் சுக்கிரன், சந்திரனை ஈர்க்கும்விதமாகப் பொருத்தம் செய்யவேண்டும்.

திருமணக் காலங்களில் அஷ்டமச்சனி நடந்தால், மற்ற வருக்கு அதனால் பாதிப்பு இல்லாமலிருத்தல் உத்தம மாகும்.

தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷமும், தசவிதப் பொருத்தத்தில் ராசிப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் ஆகியவை மிகமுக் கியம். குறைந்தபட்சம் இந்த நான்கு பொருத்தம் இல்லாத ஜாதகங்களைப் பொருத்தக் கூடாது. அத்துடன் சூட்சும கட்டப் பொருத்தம் மிக முக்கியம்.

கோட்சார ராகு- கேதுக் கள் 2, 7, 8-ஆம் இடத்தைக் கடக்கும்போது அதிக தம்பதிகளைப் பிரிக்கிறது.

புத்திர தோஷத்தினைப் பொருத்தவரை தம்பதிகள் இருவரது ஜாதகங்களிலும் லக்னம் மற்றும் ராசி இரண்டிற்கும் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடமும், ஐந்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடமும், புத்திர காரகனான குரு பகவானும், புத்திர ஸ்தானாதிபதியும் சுபத் தன்மையுடன் இருக்க வேண்டும். குரு பகவான் நீசம், பகை, அஸ்தமனம், வக்ரம், மறைவோ அல்லது மறைவிட அதிபதிகளின் சம்பந்தமோ அல்லது சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவின் சேர்க்கையோ அல்லது நட்சத்திர சாரமோ பெறாமல் இருக்க வேண்டும்.

ஜோதிடத்தின் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானமே ஒரு பெண்ணுக்கு எத்தகைய கணவன் அமைவார் என்பதைத் தெரிவிக்கும் இடமாகும். அதன்படி ஒரு பெண் ஜாதகத்தின் களத்திர ஸ்தானத் திற்கு சூரியன், குரு, புதன் சம்பந்தம்பெற உயர்குடியில் பிறந்த கணவனும், சந்திரன் சம்பந்தம்பெற அன்பு, பண்புகொண்ட கணவனும், செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முன்கோபமும், அவசர புத்தியும் கொண்ட கணவனும், சுக்கிரன் நிற்க காரகோபாவக நாஸ்தி என்றாலும்கூட- சுக்கிரன் சம்பந் தம்பெற அன்பான மனைவியை நேசிக்கக் கூடிய கணவனும், சனி சம்பந்தம்பெற மந்தபுத்தியும், அதிகமான துக்கம், தூக்கம் நிறைந்த வயோதிக கணவனும், ராகு இருந்தால் அடிமைத்தொழிலோ, பாவத்தொழிலோ செய்துகூட குடும்பத் தைக் காக்கும் கணவனும், கேது இருந்தால் தன் சுயபுத்தியால் நவீன தொழில்செய்து குடும்பம் நடத்தும் கணவனும் அமைவார். இது ஒருவருடைய ப்ராரப்த கர்மாவால் இணைக்கப்படும் கர்மவினைத் தொடர்ச்சி என்பதால், நம் ப்ராப்தம் என்ன என்பதை அறிந்து, அதற்குப் பொருத்தமான வரன், வதுவுடன் இணைந்து வாழும்போது பெரும் மனவேதனை வராது.

பெண்கள் ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானமான 7-ஆம் இடத்திலோ, மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்திலோ குரு- சுக்கிரன் இணைவோ, குரு- சந்திரன் இணைவோ இருந்து, ஆண்கள் ஜாத கத்தில் இரண்டாமிடத்திற்கோ, ஏழா மிடத்திற்கோ சுக்கிரன்- கேதுவோ, சுக்கிரன்- ராகுவோ, சுக்கிரன்- செவ்வா யோ தொடர்பிருந்தாலும் இல்லற வாழ்வை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், பிரிவையும் வேதனையையும் தருகிறது என்பதால், இந்த அமைப்புள்ள ஜாத கத்தை இணைப்பதில் கவனம் தேவை.

தம்பதியினரின் பிரச்சினையை உளவி யல்ரீதியாக ஆய்வுசெய்யும்போது, அவற்றுக் கான பல காரணங்கள் உண்மையாகவும், சில காரணங்கள் மிகவும் அனர்த்தமாகவும் இருக்கின்றன. இவை எதனால் என்று பார்க்கலாம்.

ஒரு வீட்டிற்கு ஒரே குழந்தை இருப்பதே முதல் காரணம். ஒரு குழந்தையை அளவு கடந்த அன்பினைச் செலுத்தி வளர்த்து விடுகிறார்கள். அந்தக் குழந்தை தனக்கே கட்டுப்பட்டு, தன் விருப்பப்படியே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம், பல குழந்தைகளின் திருமண வாழ்வை அழிக்கிறது. சம்பந்திகளின் கருத்து வேறுபாடு தம்பதியினரின் நெருக்கத்தைக் குறைக்கிறது. விட்டுக்கொடுத்து வாழும் தன்மை இல்லாமல், பல பெற்றோர்கள் சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி தம்பதியினரைப் பிரித்துவிடுகின்றனர். திருமணத்திற்கு முன்பு சம்பந்திகளிடம் கருத்துவேறுபாடு வந்தால் திருமணத்தை ரத்துசெய்வது, திருமணத்திற்குப் பிறகு தம்பதியினரை வாழவிடாமல் செய்வதைவிட உத்தமம். திருமணமாகி ஒரு மாதம்முதல் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கெல்லாம் ஜோதிட ரையும், நீதிமன்றத்தையும் அணுகுபவர்கள் முதலில் கூறுவது சம்பந்திகள் பிரச்சினைதான். தம்பதியினர் மனமகிழ்சியுடன் இருந்தால் மட்டுமே இல்வாழ்கை இனிமையாக இருக்கும். பெற்றோர்களின் ஈகோ தம்பதியினருக்கு நிம்மதியின்மையை ஏற்படுத்துகிறது.

தற்காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்றால் மட்டுமே பொருளா தார நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நிலை இருப்பதால், தம்பதிகள் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இருவருக்கும் ஆண், பெண் நண்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தம்பதிகள் தங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்டபிறகு தங்களுடைய நண்பர்களை வாழ்க்கைத்துணைக்கும், குடும்பத்திற்கும் அறிமுகம்செய்வது உத்தமம். திருமணத்திற்கு முன்பே நண்பர்களை அறிமுகம் செய்து வீண்வதந்தி, பிரச்சினைகளைத் தவிர்த்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

அத்துடன் ஆணுக்கு வருமானம் அதிகமாகவும், பெண்ணுக்கு வருமானம் குறைவாகவும் இருந்தால் நல்லது. ஆணுக்கு வருமானம் குறைவு அல்லது வேலையே இல்லாமல் திருமணம் செய்யும்போது ஓரிரு மாதத்தில் ஈகோவால் வெறுப்பு வந்து விடுகிறது.

பெற்றோரின் உடன்பாடில்லாமல் காதல் திருமணம் செய்பவர்கள் சென்ற இடத்தில் வாழ முடியாமல், பெற்றோரை சந்திக்கவும் முடியாமல் வாழ்வையே இழக்கிறார்கள். தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் 10-ஆவது கிரகமான செல் போனால் தவறான வாழ்வைத் தேர்வு செய்கிறார்கள்.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பண்பிலும், குணத்திலும் ஏற்ற வரனைத் தேர்வு செய்யாமல், தன் அந்தஸ் திற்கேற்ற வரனாவும், தனது பேச்சைக் கேட்கக் கூடிய வரனாகவும் அமையவேண்டும் என எதிர்பார்ப்பதும் மற்றொரு காரணமாகும்.

பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்துத் தரும்படி ஜோதிடரை நிர்ப்பந்தம் செய்தல் கூடாது. இரு குடும்பத்தின் தொழில், தகுதி ஒத்துப்போகும்போது, திருமணப் பொருத் தத்தைப் பெரிதாகக் கருதாமல், திருமணம் நடந்த பிறகு வருந்தி பிரயோஜனம் இல்லை. இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன்பாக தேவையில்லாத வீண்கற்பனைகளை வளர்த்துக் கொள்வதும், எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுடன் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும்.

நெடுங்காலமாகத் திருமணத்தடையை சந்திப்பவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்தால் 2, 7, 8-ஆம் இடத்திற்கும் ராகு- கேது, மாந்திக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கும். திருமணம் நடைபெறாமைக்கு சரியான காரணம் தெரியாமல் இருப்பவர்களின் ஜாதகத்தை சூட்சுமமாக ஆய்வுசெய்தால், நிச்சயமாக 2, 7, 8-ஆம் இடத்திற்கும் ராகு- கேது, மாந்திக்கும் சம்பந்தம் இருக்கும். பிரசன்னம் பார்த்தாலும் இதே பிரச்சினையைதான் காட்டும். சென்ற பிறவியில் தம்பதியினரை வாழவிடாமல் செய்தல் அல்லது நல்ல குடும்பத்தைப் பிரித்த காரணத்தால் ஏற்படுவதே இந்த தோஷமாகும். பலரின் மனம் பாதிக்கக் காரணமாக இருந்தவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாகவும், தன்னு டைய செயல்களால் பிறரின் மனதைத் துன்புறுத் தியவர்கள் காரணமில்லாமல் எதையோ நினைத்து துன்பப்பட்டுக்கொண்டேயும் இருப் பார்கள். துன்பம் நிழல்போல தொடர்ந்து கொண்டே இருக்கும். இது கர்மா தியரி. எனவே, காரணமில்லாமல் தம்பதியினர் பிரியக் காரணமாக இருப்பவர்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது. அதனால்தான் நீதிமன்றங்களும், வக்கீல்களும் முடிந்தவரை தம்பதியினரை சேர்த்துவைக்க முயற்சிக்கிறார்கள். இயன்றவரை நல்லவராக, உண்மையாக, அடுத்தவர்கள் மனம் புண்படாமல் நேர்மையாக இருந்தால் நிச்சயம் நற்கதி உண்டு; நல்லதே நடக்கும்.

பரிகாரம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், சங்கரன்கோவில் சங்கர நாரா யணர், கோமதியம்மன் வழிபாடும் கைமேல் பலன் தரும்.

தீர்வு

பெண்கள் ஜாதகத்தின் ஜனன சுக்கிரனுக்கு கோட்சார செவ்வாய் சம்பந்தம் பெறும் போதும், ஜனன 7-ஆம் அதிபதிக்கு கோட்சார 5-ஆம் அதிபதி சம்பந்தம் பெறும்போதும் சேர்ந்துவாழும் மனநிலையும், ஈர்ப்பும் உருவாகும் காலம்.

ஆண் ஜாதகத்தின் ஜனனச் செவ்வாய் அல்லது குருவுக்கு கோட்சார குரு அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெறும்போதும், ஜனன 7-ஆம் அதிபதி, கோட்சார 5-ஆம் அதிபதி சம்பந்தம் பெறும்போதும் முயற்சிசெய்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கோட்சார குரு 2, 7-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெறும்போதும் சேர்ந்துவாழும் மனநிலை உருவாக்கும். சில தம்பதியினர் குழந்தை பிறந்தபிறகு பிரியும் நிலை ஏற்படும். குழந்தை பிறந்தபிறகு பிரிந்தவர்கள், குழந்தையின் 9-ஆம் அதிபதிக்கு கோட்சார குரு சம்பந்தம்பெறும் காலத்தில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தொடர்புக்கு - செல்: 98652 20406