Skip to main content

அன்னை தரும் அதிர்ஷ்டம்!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

தாய் என்ற வார்த்தைக்குதான் என்ன மதிப்பு! தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு, கருணை, தியாகம் என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக்கிறாள். "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா!' என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். தாயைப் புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமியில் இருக்கவே முடியாது. கருவறையில் பத்து மாதங்கள் நம்மைப் பாதுகாத்து, உள்ளிருந்து நாம் தரும் துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் தாங்கி, தான் ஆசைப் பட்டவற்றை உண்ணாமல், உறங்காமல் அனைத்தையும் தியாகம் செய்து, பூமியில் நாம் ஜனிக்கக் காரணமாக விளங்குபவள் தாய். நாம் பிறந்தவுடன் அள்ளியணைத்து முத்தமிட்டு, தான்பட்ட கஷ்டங் களையெல்லாம் மறந்து பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் தாய்.
 

god

தாய்க்கு ஒரு மகன் எழுதிய கவிதை வரிகள்: "அடுத்த ஜென்மத்தில் என் தாய்க்கு காலணிகளாய்ப் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னைக் கருவறையில் சுமந்த என் தாயை நான் சுமக்க அது ஒன்றே வழி.' இப்படி தாயின் பெருமைகளைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். நாம் பிறந்தநேரம் தாய்க்கு நல்லது செய்யுமா? தாய்வழி உறவினர்களி டையே பந்தம் நீடிக்குமா? தாயின் உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கும்? நம்மால் அவளுக்கு அனுகூலம் உண்டா? அவளால் நமக்கு நற்பலன் விளையுமா என்பதைப் பற்றியெல்லாம் ஜோதிடம் என்ற காலக் கண்ணாடியின் மூலம் தெளிவாக அறியலாம்.
 

god

இதற்கு உறுதுணையாக இருப்பது அவரவரின் ஜனன ஜாதகத்தில் அமையும் 4-ஆம் பாவமே. நவகிர கங்களில் தாய்க்காரகனாக விளங் குபவர் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் 4-ஆம் பாவமும், சந்திரனும் பலமாக அமைவது, ஜாதகரைப் பெற்ற தாய்க்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். தாயால் ஜாதகருக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து நற்பலன்களையும் உண்டாக்கும். 4-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதும், நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பதும் சிறப்பு. நட்பு கிரகச் சேர்க்கைப் பெற்றிருப்பதும், குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன் 4-ஆம் அதிபதியும் சந்திரனும் பலமாக அமையப் பெற்றிருப்பதும், தாய்க்கு நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய்க்காரகன் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, நட்பு வீட்டில் அமையப்பெற்றோ இருந் தால் தாய்க்கு ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

4-ஆம் அதிபதி பலம்பெற்று, திரிகோணாதிபதிகளாகிய 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கைப்பெற்று, அந்த கிரகங்களுக்கு சந்திரனின் தொடர்பிருந்தால், ஜாதகருக்கு தாயால் அனைத்து நற்பலன்களும், செல்வம் மற்றும் செல்வாக்குகளும் கிடைக்கப் பெறும். தாய்வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் அனுசரணையும் ஆதரவும் சிறப்பாக இருக்கும். குழந்தைப் பிறப்பென்பது தாய்க்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். எல்லா பெண்களுக்கும் எளிதாகக் குழந்தை பிறந்துவிடுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் சூழ்நிலையும் உண்டாகிறது.

பிறக்கும் குழந்தையின் 4-ஆம் பாவம் பாதிக்கப் பட்டோ, சுபர் பார்வையின்றி இருந்தாலோ, சனி பார்வை மற்றும் கிரகணங்களை ஏற்படுத்தக் கூடிய ராகு, கேது சேர்க்கை பெற்றோ சந்திரன் இருந்தாலோ பிரசவத்தில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில குழந்தைகள் பிறக்கும்போதே தாயை இழக்கும் சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு என்ன காரணம் என ஜோதிடரீதியாகப் பார்க் கும்போது 4-ஆம் அதிபதி நீசம் பெற்றிருந்து, சந்திரன் பலவீனமாக இருந்து, சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்று சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத் திரங்களில் பிறந்திருந்தால், முதலில் சந்திர தசை நடக்கும். அதுவே தாய்க்கு கண்டத்தைக் கொடுக்கும். 4-ஆம் பாவமும் சந்திரனும் பாதிக்கப்பட்டு அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெறும் காலங்களில் தாய்க்கு பாதிப்புகளை உண்டாக்கும். மேலே குறிப்பிட்ட காலத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்றவை நடைபெற்றாலும் தாய்க்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும்.
 

mother god

தூய்மையானது தாய்மை. அதேசமயம் குழந்தையை இழிவுபடுத்தக்கூடிய சிலரும் தாய் என்ற பெயரில் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றனர். தாயாலேயே கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகளும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போடுவது, கொடுமைப்படுத்துவது, மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற பிள்ளைகளையே விரோதியாக நினைப்பது போன்ற குரூர குணங்களைக் கொண்ட தாய் அமையக் காரணம் என்னவென்று ஜோதிட ரீதியாக ஆராயும்போது, 4-ஆம் அதிபதியும் சந்திரனும் 6-ஆம் வீட்டிலோ, பாதக ஸ்தானத் திலோ அமையப் பெற்றிருந்தாலும், 4-ஆம் அதிபதியும், 6-ஆம் அதிபதியும் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் தாயாலேயே பிள்ளைகளுக்குத் துன்பம் உண்டாகும். காலபுருஷ தத்துவப்படி 4-ஆம் பாவம் கடக ராசியாகும். அதுவே சந்திரனின் சொந்த வீடாகும். கடகத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் தாய்க்கு பாதிப்பு, தாய்வழி உறவினர் வகையில் பகை உண்டாகும்.

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.