Skip to main content

வீட்டில் வடக்குச் சுவரில் பச்சை வண்ணம் இருக்கக்கூடாது ஏன் தெரியுமா ?

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

மனிதர்களுக்கு பொதுவாக நல்ல நண்பர்கள்- ஆபத்து நேரத்தில் உதவும் நண்பர்கள் கிடைக்க வேண்டும். நல்ல அறிவுரையும், ஆலோசனைகளும் கிடைக்கவேண்டும். பிரச்சினைகள் உண்டாகும்போது கைகொடுக்கும் நண்பர்கள் வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 3-க்கு அதிபதியுமான கிரகமும் அவருடைய நண்பரின் நிலையைக் குறிக்கும். 3-ஆம் பாவத்திற்கு அதிபதி நல்ல நிலையில் இருந்து, அதை குரு பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். ஜாதகத்தில் 3-ஆம் பாவம் கெட்டுப்போனால் அல்லது 3-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருந்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். 3-ஆம் பாவத்திற்கு பாவ கிரகப் பார்வை இருந்தாலும், அந்த இடத்தில் பாவ கிரகம் இருந்து இன்னொரு பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். கிடைத்த நண்பர்கள் அவரிடமிருந்து பலனைப் பெற்றுவிட்டு ஓடிவிடு வார்கள். 3-ஆம் பாவாதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நண்பர்களைப்போல வந்து அவரிடமிருந்து பொருளை அபகரித்துவிட்டு, அவரை ஏமாற்றி விடுவார்கள்.

house color for good friend

ஒரு ஜாதகத்தில் 3-க்கு அதிபதி 2 அல்லது 6-ல் இருந்தால், நண்பர்களே அவருக்கு மறைமுகப் பகைவர்களாக இருப்பார்கள். 3-ஆவது பாவத்தில் கேது இருந்து, அதை 6-ல் இருக்கும் சனி பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அவரிடம் காரியத் தைச் சாதித்துக்கொண்டு அவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் 3-க்கு அதிபதி 4-ல் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். 4-ல் கேது, செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவருக்குக் கிடைக்கும் நண்பர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். 3-ல் ராகு, 4-ல் சூரியன் இருந்தால், அவர் தன் நண்பர்களால் ஏமாற்றப் படுவார். 3-ல் ராகு, சுக்கிரன், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரின் புகழைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். தசாகாலம் சரியில்லாமல் இருந்தால், அவர்கள் அவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடு வார்கள். சிலர் அவருக்கு சூனியமும் செய்வார்கள். 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 10-ல் சனி இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரின் குடும்பத்தாருடன் சேர்ந்து அவருக்கு விரோதிகளாக மாறுவார்கள்.  

அவர்களால் பல தடைகளும் பிரச்சினைகளும் உண்டாகும். 3-க்கு அதிபதி 6 அல்லது 12-ல் இருந்து, லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 10-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால், அவர் எந்த இடத்திலும் வேலைசெய்ய மாட்டார். அங்கிருக்கும் நண்பர்கள் விரோதிகளாக மாறி, அவரைப் பற்றி தாழ்வாகப் பேசுவார்கள். சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய் 6 அல்லது 12-ஆவது வீட்டில் இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரை ஏமாற்றிவிடுவார்கள். அல்லது பெண் மோகத்தை அவருக்கு உண்டாக்கி, சொத்துகளை ஏமாற்றி அபகரித்துவிடுவார்கள். ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாக இருந்து, அத்துடன் சுக்கிரன் இருந்து, செவ்வாய், சூரியன் 6, 12-ல் இருந்தால், இளம்வயதில் அவருக்கு சரியான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அல்லது அவர்கள் அவரைத் தவறான வழிகளில் அழைத்துச்சென்று சொத்து களை அபகரித்துவிடு வார்கள். பல நண்பர்கள் அவரின் படிப்பில் பிரச்சி னையை உண்டாக்குவார்கள். லக்னத்தில் செவ்வாய், 2-ல் கேது, 3-ல் சந்திரன், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவருக்கு சரியான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். கிடைத்த நண்பர்களும் உண்மையானவர்களாக இல்லாமல், அவரைத் தவறான வழியில் அழைத்துச்சென்று அவமானத்திற்குள்ளாக்குவார்கள்.

பரிகாரங்கள் :

நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கு தினமும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு திசையில் வைத்து பூஜை செய்யவேண்டும். வீட்டில் தினமும் "ஓம் கங்க் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கூறவேண்டும். அடர்த்தியான நீலம், ப்ரவுன், கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. மாலை வேளையில் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். வீட்டில் வடக்குச் சுவரில் பச்சை வண்ணம் இருக்கக்கூடாது. வீட்டின் தென்மேற்கு திசையில் ஜன்னல்கள், கதவுகள் இருந்தால் அதை மூடி வைக்கவேண்டும்.

Next Story

‘நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?’ - இதயம் நொறுங்க வைத்த சம்பவம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

friend who wandered while keeping him in a trolley' - a heartbreaking incident

 

மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.

 

ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில்  வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.

 

 

Next Story

கால்வாயில் இருந்த சிவனடியாரின் சடலம்; வெளியான பகீர் வாக்குமூலம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

two man incident his friend while drunk in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கருப்புசாமி புதூர். இங்குள்ள அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத அளவில் சிவனடியார் வேடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

 

இதற்கிடையில், சடலமாக இருந்தவரின் முகம் மற்றும் தலையில் பலத்த ரத்தக் காயம் இருந்துள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், இறந்து கிடந்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான மதியழகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த போலீசார், அவர் தங்கியிருந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அப்போது, அங்கிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இருவரும், பல்வேறு உண்மைகளைக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட போலீசார் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

கொலை செய்யப்பட்ட மதியழகனும் பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதியன்று மதியழகன், பட்டுப்பாண்டி மற்றும் ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இரும்புக் கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம், போதையில் இருந்தவர்கள் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அப்போது, தலைக்கேறிய போதையில் இருந்த மதியழகன் ஸ்ரீமுருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் அங்கிருந்த கட்டையால் மதியழகனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அது போதாதென்று பக்கத்தில் இருந்த கல்லால் அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இதற்கிடையில், தாங்கள் அடித்ததில் மதியழகன் இறந்துவிட்டதால் ஸ்ரீமுருகனுக்கும் பட்டுப்பாண்டிக்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதியழகனின் உடலை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். அதன்பிறகு, மதியழகனின் உடலை ரெக்சின் கவரால் சுருட்டி டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கருப்புசாமிபுதூர் பகுதிக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த அமராவதி பிரதான கால்வாய் பாலத்தின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இருவரும் தப்பித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து, ஸ்ரீமுருகன் மற்றும் பட்டுப்பாண்டி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதே நேரம், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.