ஆடி, அமாவாசையையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள தெப்பக்குளம் மற்றும் மெரினா கடற்கரையில் இறந்த முன்னோர்களுக்கு மக்கள் திதி கொடுத்தனர்.
ஆடி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாள் என்று நம்பப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும், நீரில் இட்டு பித்ரு ப்ரீதி எனப்படும் சடங்கினை பெரும்பாலும் கடற்கரை அல்லது நதிகளில் செய்வர்.
ஆடி, அமாவாசை நாளான இன்று (ஜூலை 20), சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தெப்பக்குளம் மற்றும் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு மக்கள் பலர் திதி கொடுத்தனர்.