Skip to main content

"மேற்காசியாவில் நடப்பதுபோல் இங்கும் போர் நடக்கும்" திருமுருகன் காந்தி

Published on 13/11/2018 | Edited on 13/11/2018

இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் தொடர் மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமீபத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே போடப்பட்ட காம்காசா ஒப்பந்தத்தைப் பற்றியும் அதன் தாக்கம் இந்தியாவில் எத்தகையது என்பதைப் பற்றியும் விவரித்தார். 

 

 

m

 


”நான் சிறையில் இருந்தபோது இரண்டு மாதத்திற்கு முன், அமெரிக்காவுடன் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தமான காம்காசா ஒப்பந்தத்தை இந்தியா போடுகிறது. ஆனால் அதை எதிர்த்து எந்தவிதமான குரல்களும் இந்திய அரசியலில் பதிவு செய்யப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தின் சாரம் என்னவென்றால், இந்தியாவின் ராணுவ தளத்தை முழுவதையும் அமெரிக்கா பயன்படுத்தலாம் என்பதுதான். இது சீனாவுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்தக் கூடிய அளவிற்கு செல்லும். இதில் இந்திய மக்கள்தான் அடிபடப் போகிறார்கள், அதிலும் குறிப்பாக எல்லையோர மாநிலத்தில் இருக்குக்கூடிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படப் போகிறார்கள். அதில்தான் தமிழ்நாடும் இருக்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவின் நெருக்கடியும் வருவதனால், அவர்களுடன் ஆயுத ஒப்பந்தத்தை போடுகிறார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியை தொடர்ந்து எதிர்க்கக்கூடிய காங்கிரஸ் என்றாவது காம்காசா ஒப்பந்தத்தை எதிர்த்து பேசி இருக்கிறதா என்றால் இல்லை. 

 

இந்த நேரத்தில்தான் ராணுவ தளவாட உற்பத்தியை இந்திய அரசாங்கம்  அம்பானி, டாட்டா மற்றும் மஹிந்திரா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு  தாரைவார்த்து கொடுக்கிறது. தனியார் நிறுவனங்கள் லாபத்திற்காகதான் ஒரு பொருளை உற்பத்திசெயும். தொடர்ச்சியாக ஒரு பொருள் விற்க வேண்டுமென்றால் அதற்கான தேவை மீண்டும் மீண்டும் ஏற்பட வேண்டும். ராணுவ தளவாட பொருட்களை விற்க வேண்டும் என்றால், போர் நடக்க வேண்டும். அப்படித்தான் இப்போது மேற்காசியாவில் யுத்தங்கள் நடக்கின்றது, அதேபோல் இங்கேயும் நடக்கும். ஆனால் இதைப் பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை.”

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.