Skip to main content

மந்திரம் சொன்னால் கொரோனா வைரஸ் தாக்காது - தலாய்லாமா!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 5000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.



இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துகொள்ள அனைவரும் மந்திரம் ஒன்றை சொல்ல வேண்டும் என்று புத்தமதத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, " ஓம் தாரே தாத்தாரே சுரே சோஹா என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் கொரோனா வைரஸ் பரவாது" என்று அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் இந்த வைரஸை அழிப்பதற்காக இரவு பகலாக உழைத்து வரும் நிலையில் மந்திரத்தை சொல்ல சொல்கிறாரே தலாய்லாமா என்று இணையத்தில் அவரை சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்