Skip to main content

நிலவில் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டம்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 'ஆர்ட்டிமிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2024 ஆண்டுக்குள் நிறைவேற்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை அமெரிக்கா அரசு அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவலை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் "ஆர்ட்டிமிஸ்" என்றால் கிரேக்கத்தில் "நிலாப் பெண்" என்று அர்த்தம். அதனைத் தொடர்ந்து நிலவில் மனிதன் இறங்கி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் , தற்போது இத்திட்டத்தை நாசா முன்னெடுத்திருப்பதை உலக நாடுகளும் வரவேற்றுள்ளனர்.

 

NASA

 

 

இது வரை நிலவில் 12 மனிதர்கள் மட்டுமே தரையிறங்கி இருப்பதாகவும், அதில் அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால்  நாசாவின் இந்த திட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் சுமார் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை அதிகரித்து வழங்கியுள்ளதால் , நாசாவின் கட்டமைப்பு பணிகள் , தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்த உள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவில் இதுவரை பெண் தரையிறங்கியதே இல்லை என்பது அனைவரும் அறிந்தது.சர்வதேச அளவில் தொழில் நுட்ப தகவல்களை பல்வேறு நாட்டு அரசுக்கு வழங்கி வருவதில் நாசா முதலிடம் வகிக்கிறது. விண்வெளியில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படங்கள் மூலம் உலகிற்கு செய்திகளை வழங்கி வருகிறது நாசா என்றால் மிகையாகாது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த 4 விண்வெளி வீரர்கள்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

4 astronauts reach the International Space Station

 

விண்வெளி வீரர்கள் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்ததாக நாசா அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி பூமியில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது.

 

இந்தப் பயணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாஸ்மின் மொக்பெலியின் தலைமையில் டென்மார்க்கின் ஆண்ட்ரியாஸ் மொஜென்சன், ஜப்பானின் சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் ஆகியோர் அடங்கிய 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒரு வருட காலம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

சந்திரயான் - 3 ஐ கண்காணிக்கும் உதவியில் நாசா

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 NASA to help track Chandrayaan-3

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்ற நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்க தயாராகி வருகின்றனர்.

 

இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தை அனுப்ப அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பிய விண்வெளி முகமையும் உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. நிலவுக்கு செல்வதற்கான சந்திரயான் - 3  மேற்கொண்ட 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் முழுவதும் நாசாவும், ஈ.எஸ்.ஏவும் உதவி செய்துள்ளது. நிலவை சுற்றி வரும் தாய்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்விலும் நாசா மற்றும் ஈ.எஸ்.ஏவின் உதவிகள் முக்கியமானது. உலகின் பல இடங்களில் இருந்து அமெரிக்காவின் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் சந்திரயான் - 3ஐ கண்காணிக்கின்றன. அமெரிக்கா நிறுவியுள்ள பிரம்மாண்டமான ரேடியோ ஆன்டெனாக்கள் வழி சந்திரயான் - 3ன்  பயணம் கண்காணிக்கப்படுகிறது.

 

பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையும் 15 மீட்டர் ஆண்டெனாவின் உதவியையும் இஸ்ரோ நாடியுள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் கூன் கில்லியில் உள்ள 35 மீட்டர் விட்ட ஆண்டெனாவும் சந்திரயானை கண்காணிக்கும் பணியில் உதவி வருகிறது.