Skip to main content

வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

imgenuity

 

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது அக்கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.

 

இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்தது. இந்த விண்ணூர்தி, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

 

இந்த ‘பெர்சவரன்ஸ்’ விண்ணூர்தியில், ‘இன்ஜெனுயிட்டி’ என்ற ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனுயிட்டி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. அப்போது, வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையை இன்ஜெனுயிட்டி பெறும். வேற்று கிரகத்தில் பறக்கவுள்ள முதல் ஹெலிகாப்டர் என்பதால் இந்த இன்ஜெனுயிட்டியில், ரைட் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட துணியின் சிறிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.

 

 

சார்ந்த செய்திகள்