Skip to main content

மெக்ஸிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை...!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

g
கோப்புப் படம்

 

மெக்ஸிகோ நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவரை காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பத்திரிகையாளர் உயிரிழந்தார்.

 


மெக்ஸிகோ கிழக்குப் பகுதியில் உள்ள மிலியானா சபாதா எனும் நகரில் உள்ள நடசத்திர உணவு விடுதியில் சனிக்கிழமை, மர்ம நபர்களால் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஒருவர் ஏஎப்பியிடம் தெரிவித்துள்ளதாவது, “மெக்ஸிகோ கிழக்குப் பகுதியில் உள்ள டபாஸ்கா மாகாணத்தில், மிலியானா சபாதா எனும் நகரத்தில் உள்ள நட்சத்திர உணவு விடுதியில் சனிக்கிழ்மை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 

 

காரில் வந்திறங்கிய சிலர் உணவு விடுதிக்குள் நுழைந்து திடீரென்று அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த, ஜீசஸ் ராமோஸ் ரோட்ரிக்ஸ் எனும் பத்திரிகையாளரை சுட்டு கொன்றுள்ளனர். இவர் உள்ளூர் 99.9 எப்.எம் வானொலியில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்! - விளக்குகளை அணைத்து வைத்த ஐஃபில் டவர்!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
eifel

 

 

 

உண்மைச் செய்திகளை உலகிற்குத் தெரியப் படுத்தியதன் விளைவாக பல்வேறு இன்னல்களை இன்றளவிலும் பத்திரிகையாளர்கள் சந்திக்கின்றனர். இதற்காக பத்திரிகையாளர்கள் பலர் உடைமைகளையும், உயிரையும் கூட இழக்க நேரிடுகிறது. 
 

 

 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸ் நகரின் அடையாளமாக இருக்கும் ஐஃபில் டவர் முன்பு, கொல்லப்படும் பத்திரிகையாளர்களை நினைவுகூரும் விதமாகவும், அதைக் கண்டித்தும் ஏராளமான பத்திரிகையாளர்கள் நவம்பர் 2 அன்று குழுமியிருந்தனர். இந்த ஒருங்கிணைப்பை பிரெஞ்சு என்.ஜி.ஓ. எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு முன்னின்று நடத்தியது. கூடியிருந்தவர்கள் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களின் புகைப்படங்களைக் கையிலேந்தி முழக்கங்களை எழுப்பினர். 
 

குறிப்பாக, சமீபத்தில் துருக்கி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, துண்டுதுண்டாக ஆக்கப்பட்ட பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஜமால் கஷோக்கியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. பிரெஞ்சு என்.ஜி.ஓ. எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். செய்திகள் வெளியிட்டதற்காக சிறையில் அடைக்கப்படுகின்றனர் என குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்கும் விதமாக ஐஃபில் டவரின் மின்விளக்குகள் சில நிமிடங்கள் அணைத்து வைக்கப்பட்டன. 
 

Next Story

கௌரி லங்கேஷ் கொலையும் நாயின் மரணமும்! - ராம சேனா தலைவர் சர்ச்சைப் பேச்சு

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

ராம சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் மரணத்தை நாயின் மரணத்தோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

muthalik


 

 

மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்துத்வ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, கொலையில் ஈடுபட்ட முக்கியக்குற்றவாளி பரசுராம் வகாமாரே உட்பட ஆறுபேரைக் கைது செய்துள்ளது.
 

இந்நிலையில், நேற்று ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக், ‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியின்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் காங்கிரஸ் அரசின் தோல்வியைப் பற்றி யாருமே பேச முன்வரவில்லை. ஆனால், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பலர் கௌரி லங்கேஷ் கொலை மரணம் குறித்து பிரதமர் மோடி பேசவேண்டும் என வலியுறுத்துகின்றனர். கர்நாடகாவில் ஏதோவொரு நாய் செத்துப்போனதைப் பற்றி மோடி ஏன் பேசவேண்டும்?’ என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
 

 

 

கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட பரசுராம் வகாமாரே, ஸ்ரீராம் சேனா தலைவர் ப்ரமோத் முத்தாலிக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.