Skip to main content

உலகக் கடனில் தனிநபரின் கடன் 86,000 அமெரிக்க டாலர்...!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

உலகக் கடன் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதென சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் உலகக் கடன் 182 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என சர்வதேச செலவாணி நிதியம் கணித்திருந்தது. ஆனால், இதுவரை இல்லாத அளவு உலகக் கடன் உயர்ந்து 184 டிரில்லியன் என இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம் அறிவித்துள்ளது. 

 

ii

 

 

தோராயமாக உலகக் கடனில் தனிநபரின் கடன் 86,000 அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தனிநபர் கடன் தொகை என்பது, தனிநபர் வருமானத்தைவிட இரண்டரை மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

உலக அளவில் அதிகக் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளது எனவும், மற்றும் மொத்த கடனில் இந்த மூன்று நாடுகள்தான் பாதிக்கும் மேலான கடனை வாங்கியுள்ளது எனவும் சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது.

 


மொத்த உலக கடனான 184 டிரில்லியன் அமெரிக்க டாலரை சதவிகிதத்தில் கணக்கிட்டால் 2017-ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 225% என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய பொருளாதாரம்... சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை...

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிவரும் பொருளாதார சரிவு மற்றும் தேக்கநிலை ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும், மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பி வந்தது.

 

imf about indian economy

 

 

மத்திய அரசு சார்பில் இதுகுறித்து பெரிதாக எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசினார். ஆனால் அவரது விளக்கம் போதுமானது அல்ல என்று கருத்துக்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் வலிமையற்றதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட கடுமையான வீழ்ச்சியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சர்வதேச நாணய நிதிய செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் கூறுகையில், "எதிர்பார்த்தைவிட இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் கூடுதல் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களை வருகிற சர்வதேச பொருளாதார அவுட்லுக் மூலம் வெளியிடப்படும்" என கூறியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

கடன் கேட்டு சென்ற இம்ரான் கானுக்கு ஐஎம்எப் கூறிய அறிவுரை...

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

பாகிஸ்தான் அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக நேற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், அங்கு அரசு ரீதியிலான பல சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார்.

 

pakistan prime minister imrankhan meets imf officials in america

 

 

இந்த பயணத்தில் வெள்ளை மாளிகை சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். இம்ரான் கான் நேற்று அமேரிக்கா செல்லும் போது தனி விமானம் மூலமாக பயணம் செய்யாமல், வர்த்தக விமானத்தில் பயணிகளுடன் பயணம் செய்து வாஷிங்டன் சென்றடைந்தார். ஆனால் வாஷிங்டன் விமான நிலையத்தில் அவரை வரவேற்க அமெரிக்காவின் சார்பில் அதிகாரிகள் யாரும் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலையை மேம்படுத்த கடன் பெறுவது தொடர்பாக பேச ஐஎம்எப் அமைப்பின் செயல் நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்ஸனை சந்தித்து பேசினார். ஆனால் அவர் இம்ரான் கானுக்கு அறிவுரை கூறி, கடன் தருவது குறித்து முடிவு சொல்லாமல் சந்திப்பை முடித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டேவிட் லிப்ஸன், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தபோது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அப்போது வரி வசூலிப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை பெருக்குவதில் கவனம் செலுத்தமாறு அவருக்கு நாங்கள் ஆலோசனை கூறியுள்ளோம். வளர்ச்சி திட்டங்களுக்கும், சமூகநல மேம்பாட்டுக்கும் பாகிஸ்தான் அரசு செலவு செய்யலாம். ஆனால் அதே நேரம் மற்றவர்களிடம் வாங்கும் கடன் அளவையும் குறைப்பதற்கு பாகிஸ்தான் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.