Skip to main content

ஃபிபா கால்பந்து இறுதிப்போட்டியில் குகையில் சிக்கிய 13 பேர் ??!!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

குகையில் சிக்கி 18 நாட்கள் மரணப்போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 13 பேருக்கு ஃபிபா கால்பந்து இறுதி போட்டியை காண அழைப்பு விடுத்திருந்தது  பிபா.

தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியான தாம் லூவாங் என்ற மலை பகுதிக்கு கடந்த 23-ஆம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் கால்பந்தாட்ட வீர்கள் (சிறுவர்கள்) உட்பட 13 பேர் மலையேற்ற பயிற்சியின் போது ஒரு குகையில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அங்கு பெய்த கனமழையால் அவர்கள் குகையின் உள்ளே சிக்கிக்கொண்டு இறுதியில் காணாமல்போயினர்.  

 

CAVE

 

 

 

இவர்களை மீட்க தாய்லாந்து ராணுவம் மற்றும் மீப்பு படை உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் குகையில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் ஈட்பட்டிருந்தனர். ஆனால் குகையில் மாயமான நபர்களை கண்டு பிடிக்கமுடியாத நிலையில் ஒன்பது நாட்களை கடந்து அவர்கள் இருக்கும் இடத்தை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.

 

 

 

அதனை  தொடர்ந்து பல்வேறு கட்ட மீட்பு பணிகளை தொடர்ந்து முதலில் 4 பேர் அதன்பின் 4 பேர் கடைசியாக 5 பேர் என நேற்று குகையில் மரணத்தின் பிடியில் சிக்கி தவித்த 13 பேரையும் காப்பாற்றி நிம்மதி பெருமூச்சு விட்டது தாய்லாந்து அரசு. இதனால் அங்கு மகிழ்ச்சி சூழ்ந்துவந்த நிலையில் குகையில் சிக்கிக்கொண்டவர்கள் கால்பந்தாட்ட வீரர்கள் என்பதால் அவர்கள் மீட்கப்பட்டால் ரஷ்யாவில் 15-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபிபா கால்பந்தாட்ட இறுதி போட்டியை காண வரவேண்டும் என ஃபிபா அமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்ப்பட்டுள்ளதால் 15-ஆம் தேதிக்குள் முழு உடல் நலம் பெறவாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைய பொறுப்புடன் செயல்படுவோம் - முதல்வர்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
We will act responsibly to achieve the goal of Accident Free Tamil Nadu CM

இந்தியாவில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைப் பாதுகாப்பு மாதம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது. சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நம் அனைவரின் கடமையாகும். நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது.

சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.

சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றத் தவறுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தனி மனித நடத்தை, ஓட்டுநரின் உளவியல் நிலை, பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலையின் அமைப்பு, சுற்றுப்புறச்சூழல் போன்றவைகளே சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணிகள் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தற்போதைய மற்றும் வருங்கால சாலை உபயோகிப்பவர்களிடையே பாதுகாப்பான சாலைப் பயனாளர் நடத்தையை ஊக்குவிப்பதற்காக சாலைப் பயனாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்குவது அரசின் முக்கிய நோக்கமாகும். 

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம் : நம்மைக் காக்கும் 48’ என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில், அரசானது வாகனத்தை இயக்கிவரும் ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். சாலை விதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே; விதிகளை மதிப்போம், வேதனைகளைத் தவிர்ப்போம்; சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இடி, மின்னல் நேரங்களில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தக் கூடாது! மின்வாரியம் சொல்றத கேளுங்க...

Published on 18/10/2020 | Edited on 18/10/2020

 

 

RAIN SEASON EB SAFETY PRECAUTIONS PEOPLES FOLLOWING

பருவமழை காலங்களில் வீடுகள், நிறுவனங்களில் மின்சாதனங்களை எப்படி கையாள வேண்டும், என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக மின்வாரியம் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

 

இதுகுறித்து சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

வீடுகள், நிறுவனங்களுக்கான மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலமாகவும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின்சாதனங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும்.

 

சுவிட்ச் போர்டுகளில் பிளக்குகளை பொருத்தும் முன்பும், எடுக்கும் முன்பும் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும். குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் ஆகியவற்றுக்கு எர்த் வசதியுடன் கூடிய 3 'பின்' சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக இணைப்பு கொடுக்க வேண்டும்.

 

கேபிள் டிவி வயர்களை, மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள், பிராணிகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.

 

சுவிட்சுகள், பிளக்குகள், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின் கம்பம் மற்றும் அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது கொடி கயிறுபோல துணி காய வைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது. அவற்றில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.

 

மின் கம்பத்தை பந்தலாக பயன்படுத்துவதையும், அதன்மீது விளம்பர பலகை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

 

மழை மற்றும் பெருங்காற்றால் அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அவ்வாறு இருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலைய வேலியின் அருகே சிறுநீர் கழிக்க வேண்டாம்.

 

மின்சாதனங்களில் தீவிபத்து ஏற்படும்போது, உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனப்பொடி அல்லது கார்பன் டை ஆக்சைடு வாயு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம்.

 

இடி, மின்னலின்போது வெட்டவெளி, திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம். மேலும், அதுபோன்ற சமயங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

 

சேலம் மாநகராட்சி வட்டத்திற்குள் ஏற்படும் மின்தடை மற்றும் பழுதை சரி செய்ய 9445851912 (வாட்ஸ்ஆப்), 1912 (லேண்ட்லைன்), 180042519122, 0427 2414616, 9445857471 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

செயற்பொறியாளர்களிடம் சேலம் நகரத்திற்கு 9445852090, சேலம் கிழக்கு 9445852310, சேலம் மேற்கு 9445852320, சேலம் தெற்கு 9445852330, வாழப்பாடி 9445852350, ஆத்தூர் 9445852340 ஆகிய எண்களிலும், மேற்பார்வை பொறியாளரை 9445852300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.