Skip to main content

வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தினால் 82 லட்சம் ரூபாய் அபராதம்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 The country imposed a fine of 82 lakh rupees for using a foreign language

 

பிறருடன் பேசும்போது வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தினால் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது இத்தாலி அரசு.

 

இத்தாலியில் நாட்டின் முதன்மை மொழியாக இத்தாலிய மொழி இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காகப் பிறருடன் பேசும் பொழுது வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காகவோ அல்லது வணிகம், அதிகாரப்பூர்வ ஆவணம் உள்ளிட்டவற்றில் இத்தாலி மொழியைத் தவிர்த்து ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளைப் பயன்படுத்தினால் 4 லட்சம் ரூபாயிலிருந்து 82 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என இத்தாலி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தாமதப்படுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை தான் உருவாகும்' - போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்  

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'If we keep delaying, the problem will arise here again' - Transport Workers' Union interviewed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று  தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.