Skip to main content

ஐ.நா. யுத்த நிறுத்த தீர்மானத்தையும் மீறி சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்!

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

சிரியா நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. சமீப காலமாக அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரிய நாட்டு அரசு நடத்தும் விமானத் தாக்குதல்களால் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

 

சிரிய நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 527 பேர் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 129 பேர் குழந்தைகள் என்பது சோகமான தகவல்.

 

Syria

 

சிரியாவில் நடத்தப்படும் இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. யுத்த நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றியது. சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில், அடுத்த 30 நாட்களுக்கு யுத்த நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனாலும், இந்த தீர்மானத்தை சிரியா அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை காலை கிழக்கு கோட்டா பகுதிகளில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மர்க்கேல் மற்றும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் ஆகியோர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைத் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஆனாலும், ‘தீவிரவாதப் படைகள்’ மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகிறோம் என சிரிய ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

"நாம் ஒன்றிணைவோம்" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்னி லியோன் உதவி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Sunny Leone help to Turkey earthquake victims

 

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.   

 

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம். 

 

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு கை கொடுங்கள். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.   

 

 

Next Story

துருக்கியில் தொடரும் துயரங்கள்; 36 ஆயிரத்தை நெருங்கிய உயிர்ப்பலி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

turkey earthquake casualty toll approaching 36 thousand ongoing

 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

மீட்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் முடுக்கி விடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.