Skip to main content

மகளிடம் தகராறு செய்த மருமகன்! தாயின் புலம்பலால் நடந்த விபரீதம்! 

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Youth passes away in tenkasi police arrested seven
அரவிந்த்

 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் டிரைவராக இருந்துவந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மாலாவின் தாய், தந்தைக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பெண்ணின் தாய் தந்தையர் தென்காசி மாவட்டம், கீழப்புலியூரைச் சார்ந்தவர்கள். பணி நிமித்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பெருநாழியில் செட்டிலாகியுள்ளனர். இதனிடையே அரவிந்த் மாலா தம்பதியருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

 

கடந்த 3ம் தேதி அரவிந்த், வேலை தேடி தென்காசி மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்குளம் செல்வதற்காக தென்காசி வந்துள்ளார். அதுவரை அவருடன் பேசிவந்த அவரது உறவினர்களால், 4ம் தேதி முதல் அரவிந்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.கற்பகராஜ் உள்ளிட்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

 

அதில், தென்காசி வந்த அரவிந்த் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியதுடன் வேட்டைகாரன்குளத்திலுள்ள சிலருடன் சென்றது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், அரவிந்தின் செல் போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போலீசாருக்கு அது கேரளாவிலுள்ள ஒரு நகரின் டவர் லைனைக் காட்டியிருக்கிறது. இதில் குழம்பிப்போன போலீசார், விசாரணையில் தீவிரம் காட்டினர். 

 

Youth passes away in tenkasi police arrested seven

 

அந்த விசாரணையில், வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அரவிந்துடன் நட்பாகி பின்னர், அவருக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, தனது நண்பர்களான கீழப்புலியூரின் சீத்தாராமன், பொன்னரசு, அருணாசலம் தம்பிரான் ஆகியோருடன் சேர்ந்து பட்டக்குறிச்சியை அடுத்துள்ள கல்குவாரிக்கு அரவிந்தைக் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அரவிந்தைக் குத்திக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி அங்குள்ள குளத்தில் வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது.

 

போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த கொலையாளிகளான மணிகண்டனும், சீதாராமனும் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கின்றனர். பின்னர் பொன்னரசு மற்றும் தம்பிரான் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அரவிந்தைக் கொலை செய்து அவரது செல்போனை பாபனாசம் சினிமா பாணியில் கேரளா செல்லும் லாரியில் வீசியதும் இந்தக் கொலையில் தாங்கள் அல்லக்கைகள் தான். மேலும் பலருக்குத் தொடர்பிருப்பது பற்றியும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Youth passes away in tenkasi police arrested seven

 

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அரவிந்தின் மாமியாரான விளாத்திகுளம் ராஜேந்திரனின் மனைவி ராணி (43), கீழப்புலியூரின் வசந்த் (20) இருவரையும் கைது செய்த போலீசார், 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மற்றவர்களையும் தேடி வருகின்றனர். 


அன்த பிறகே இக்கொலையின் ட்விஸ்ட் விடுபட்டுள்ளது. அரவிந்தின் மாமியார் ராணிக்கு தன் மகளின் காதல் திருமணத்தில் விருப்பமில்லை. எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் 2 வயதில் பெண்பிள்ளையும் என்றான பிறகும் அரவிந்தன் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி தன் மகளுடன் தகராறு செய்து அவளைத் துன்புறுத்தியிருக்கிறார். இதனை தனது கிராமமான கீழப்புலியூரிலிருந்து தன்னை அடிக்கடி பார்க்க வரும் தனது பேரன் உறவு முறை கொண்ட வசந்திடம் அடிக்கடி ராணி கூறியுள்ளதைத் தொடர்ந்தே வசந்த், தன்னுடைய ஏற்பாட்டில் மணிகண்டனின் தலைமையிலான கூலிப்படையை ஏவியதுடன் அவர்களுக்கான பணமும் அவரே கொடுத்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.