Skip to main content

இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Young man arrested for extorting money from a young woman ...

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பருத்திக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்பிரகாஷ் வயது 21. இவர் தர்மபுரியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். சமூக வலைதளம் மூலம் அருள்பிரகாஷுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளனர் இதனால் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்பட்டதையடுத்து காதலர்களாக வலம் வந்துள்ளனர். இப்படி பல இடங்களுக்கும் சென்று இருவரும் நெருக்கமாக இருக்கும்போது, அருள்பிரகாஷ் புகைப்படங்களை எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அருள்பிரகாஷ் ‘நான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவச் செய்து, அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துவேன். அப்படி நடக்காமல் நிறுத்த வேண்டுமானால் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தர வேண்டும்’ என்று அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த திண்டிவனம் போலீசார், தர்மபுரி சென்று அருள்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.

 

‘இளம் வயது பெண்கள் காதல் என்ற பெயரில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகி புகைப்படம் எடுத்துக்கொள்வது, அவர்களை மீறி நெருக்கமாகப் பழகுவது போன்ற காரணத்தினால் அவர்களைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருள்பிரகாஷ் போன்ற ஆண்கள் உங்கள் புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்வது போன்ற சம்பவங்கள் ஒரு தொடர் சம்பவங்களாக நடந்துவருகின்றன அதனால் இளவயது பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.