Published on 06/10/2019 | Edited on 06/10/2019
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை தொடர்பாக மேலும் 14 பேரை பிடித்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை. திருச்சி கே கே நகர் காவல் மண்டபத்தில் வைத்து 14 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே இன்று காலை பிரபல கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் முரளியை திருவாரூரில் கைது செய்த தனிப்படை போலீசார், அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவன் கொடுத்த தகவலின் பேரில், இந்த 14 பேரை காவல்துறை கைது செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரபல கொள்ளையன் முருகன் கூடிய விரைவில் காவல்துறையிடம் சிக்குவான் என எதிர்பார்க்கப்படுகிறது.