Skip to main content

இப்பதான் சொன்னீங்க சி.எம்.ன்னு.. அதுக்குள்ள எங்க போனீங்க...

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
bjp


கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மீடியாக்களில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று செய்திகள் வெளியாகின. எடியூரப்பா ஆட்சி அமைக்கிறார் என்று பட்டி தொட்டி எங்கும் பேச்சுகள் எழுந்தன. 
 

கர்நாடக பாஜக அலுவலகத்தில் வான வேடிக்கை விண்ணை புளந்தது. இனிப்புகள் வாரி வழங்கப்பட்டன. எடியூரப்பா வாழ்க, முதல் அமைச்சர் எடியூரப்பா என முழக்கங்கள் எழுந்தன. மீடியாக்களில் பாஜகவினர் மோடி அலை என்று பேட்டி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்க்க தயார் என்றும், அக்கட்சியின் தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்க தயார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்தது. 

 

bjp


 

அப்படியா... இதோ வரேன்னு சொல்லிய குமாரசாமி, தனது வேட்பாளர்களை பத்திரப்படுத்தினார். சுயேட்சைகள் இருவருக்கும் வலை வீசினார். தேவகவுடாவுடன் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆளுநரை சந்திக்க திட்டம் தீட்டினர். அனைத்து தொகுதி முடிவுகளுக்காகவும் காத்திருக்கின்றனர்.
 

இந்த கூட்டணி முடிவு மக்களிடையே பரவியதையடுத்து, கர்நாடக பாஜக அலுவலகம் அமைதியானது. முதல் அமைச்சர் எடியூரப்பா என்ற முழக்கம் கேட்கவில்லை. பெருமளவு கூடியிருந்த தொண்டர்கள் கூட்டமும் கொஞ்சம் குறைந்தது. எடியூரப்பா அருகில் இருந்தவர்கள், நீங்கதான் சி.எம்., வாழ்த்துக்கள் என்று சொன்னவர்கள் அமைதியானார்கள். இதையெல்லாவற்றையும் பார்த்த எடியூரப்பா, யாரும் கவலைப்பட வேண்டாம், அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வரட்டும். சுயேட்சைகளிடம் பேசி பாருங்கள். அதற்கான குழுவை அமையுங்கள். அதற்குள் யாரும் சோர்ந்துவிட வேண்டாம் என கூயியிருக்கிறாராம். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாது விவகாரம் - கர்நாடக முதல்வரின் கொடும்பாவி எரிப்பு!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
h

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. 

 

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது,  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், கர்நாடக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், கர்நாடக அரசுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும்  முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்கள் எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றவர்கள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணாடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

 

Next Story

"மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுக"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

tamilnadu chief minister wrote a letter for karnataka chief minister

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இன்று (04/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.  

 

அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகக் கூறும் கருத்தை ஏற்க முடியாது. பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. மேகதாது திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு அங்கீகரித்த நதிநீர் பங்கீட்டு அளவை குறைத்துவிடும். தமிழகம்- கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நேற்று (03/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.