Skip to main content

ஐஏஎஸ் ஆக முயன்றவரை அடையாளம் தெரியாமல் ஆக்கிய காதல் தோல்வி... குமரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

 The love failure that made the person who tried to become an IAS unrecognizable... a touching incident in Kumari!

 

ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ, ஐஏஎஸ் தேர்வுக்கு சீரிய முயற்சி இப்படி கனவுடன் இருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாமல் நிர்மூலமாக்கியுள்ளது காதல் தோல்வி. அப்படியொரு நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது கன்னியாகுமரியில்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலையைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் முருகனையே சுற்றி சுற்றி வந்துள்ளார். அடையாளமே தெரியாத அந்த நபர் யார் என அருகில் சென்று விசாரிக்கையில் அந்த நபர் தனது உறவினர் முத்து என்பது தெரிந்தது அதிர்ந்து போனார் முருகன். மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன முத்துவை பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில் முத்து கிடைத்த செய்தியை அவரது குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் முருகன். 

 

 The love failure that made the person who tried to become an IAS unrecognizable... a touching incident in Kumari!

 

தொடர்ந்து முத்துவை சலூனுக்கு அழைத்து சென்று அழகுபடுத்தி, புது உடைகளை வாங்கித்தந்துள்ளார். சம்பவம் அறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த முத்துவின் குடும்பத்தார் முத்து குறித்து தெரிவிக்கையில், ராஜபாளையத்தில் பி.காம் பட்டப்படிப்பு முடித்த முத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏவும் முடித்துள்ளார். தொடர்ந்து ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் விடுதியில் தங்கி இருந்து தேர்வு எழுதி வந்துள்ளார். அதேநேரம் காதல் தோல்வியால் சற்று மனமுடைந்து காணப்பட்டார் முத்து. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி தங்கியிருந்த விடுதியிலிருந்து காணாமல் போயுள்ளார். சென்னை காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத முத்து தனது உறவினர் முருகன் மூலமாகக் கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.