Skip to main content

''அதிகாரத்தில் இருந்தால் இப்படி பேசலாமா?''-ஆளுநருக்கு வைகுண்டர் பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதானம் குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குபவர் தமிழக ஆளுநர் ஆர்.என்ரவி. கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு ஆளுநர் மீது அடுக்கி வருகிறது. இதற்காக நீதிமன்றங்களில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநர் உரைக்கும் சட்டப்பேரவைக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை போல் சட்டப்பேரவையில் சர்ச்சை நிகழ்வுகளும் நடந்து பரபரப்பாகி இருந்தது.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலாவாக செல்லும் பொழுதும், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவிற்கு செல்லும் பொழுதும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமி குறித்து அண்மையில் ஆளுநர் கூறியது கடும் கண்டனத்தை பெற்றுவருகிறது.

ஐயா வைகுண்டசாமியின் 192-வது அவதார தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது விழாவில் பேசிய ஆளுநர், 'ஐயா வைகுண்டர் சனாதனத்தை காக்க வந்தவர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் வைகுண்டர் தலைமை பதவி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''புராணங்கள் புகுத்தப்பட்டுள்ளது என வைகுண்டர் சொல்லி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் வரலாறு திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவையெல்லாம் பொய்யானது. எனவே அதனை நம்பி இருக்காதீர்கள். நீங்கள் ஒரு புதிய சகாப்தத்திற்கு வாருங்கள். தெய்வத்தை உங்களுக்குள்ளே பாருங்கள் என கண்ணாடி வழிபாடு கொண்டுவந்தார்.

எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. அவரவர் தாய்மொழியில் அவரவர்கள் வழிபடுங்கள். அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும். வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போல் யாரும் செய்யக்கூடாது. உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் செய்ததை எதிர்த்தவர் வைகுண்டர். மனிதனுக்குள்ளையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர்களுக்கு வேண்டிய சமூக நீதி கேட்டவர் வைகுண்டர். ஆளுநர் அவருடைய பெருமையை பேசி இருக்கலாமே? சனாதனம் என்று சொல்லக்கூடிய ஒரு மதத்திற்காக அந்த மதத்தில் இருக்கக்கூடிய ஜாதி, மனு தர்மம் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர். வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்கக் கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது '' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.