Skip to main content

மினி கிளினிக் திறக்க மகளிர் அமைப்பு எதிர்ப்பு...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Women's organization didn't allow  to open mini clinic ...
                                                        மாதிரி படம் 


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ளது ஏமப்பூர் கிராமம். இந்தக் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பினர் தங்கள் அமைப்பு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை வைத்து பராமரித்து வருகிறார்கள். 
 


மேலும், மகளிர் அமைப்பினர் சம்பந்தமான கூட்டங்கள் அங்கே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்தக் கட்டிடத்திற்குள் திடீரென்று புகுந்த சுகாதாரத் துறையினர் அங்கிருந்த ஆவணங்களை வெளியில் தூக்கிப் போட்டுவிட்டு, கட்டிடத்தை சுத்தம் செய்து வர்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணிகள் செய்ததாகவும், திறப்பு விழாவிற்காக வாழைமரம், தோரணம், கலர் பலூன்கள் எல்லாம் கட்டப்பட்டு தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 


இந்தத் தகவல் மகளிர் அமைப்பினருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு புறப்பட்டு கும்பலாக வந்த மகளிர் அமைப்பினர், சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது இங்கு மினி கிளினிக் திறப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமையிலான குழுவினர் பரபரப்பாக செய்து கொண்டிருந்தனர். இதனை அறிந்த கிராம வறுமை ஒழிப்பு மகளிர் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அங்கே திரண்டு வந்தனர். 

 


எங்கள் அனுமதி இல்லாமல் கட்டிடத்திற்குள் சென்று ஆவணங்களை எல்லாம் வெளியில் எப்படி தூக்கி எறியலாம் என்று கண்டித்ததோடு அந்தக் கட்டிடத்தில் மினி கிளினிக் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகளிர் அமைப்பினருக்கும் சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து, திருவெண்ணெய்நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், மகளிர் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு மினி கிளினிக் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. 

 

மருத்துவ குழுவினர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 2,000 கிராமங்களில் மினி கிளினிக் திறப்பதற்கு உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான கட்டிடங்கள் கிராமப்புறங்களில் உள்ளதா என்பதைப் பற்றி ஆய்வு செய்யாமல் திடீரென்று எடுத்த இந்த முடிவால் பல்வேறு இடங்களில் மினி கிளினிக் திறப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.