Skip to main content

அம்மாவின் ஆத்மாவும் கடவுளும் உங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள்... அதிமுக தொண்டனின் குமுறல்...

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பல இளைஞர்களுக்கு விலை உயர்ந்த செல்போன்களை வாங்கிக் கொடுத்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை வீடியோ, படங்கள் எடுத்து பல சமூக வலைதளங்களிலும் பரப்ப தனியாக ஒரு ஐ டி விங்க் ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில் புதுகை புயல் சிவிபி பேரவை என்றும் பல பெயர்களில் அமைச்சர் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பதிவுகளும் படங்களும் பதிவிட்டு வருகின்றனர்.
 

pudukkottai state minister vijayabasker it wing facebook update

அதில் ஒரு முகநூல் பக்கம் புதகை புயல் வி பி பேரவை. அந்த பக்கத்தில்தான் ஒரு அதிமுக தொண்டரான வழக்கறிஞர் ராஜாளி சீ.ஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்து ஜெ மரணம் குறித்து ஆட்சியில் உள்ளவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்.

ஜெ. நினைவு தினத்தில் அவர் எழுதியுள்ள பதிவில்,

அம்மா மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்காதா? ஆட்சியை, கட்சியை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றி வருகிறார்கள் மாண்புமிகு ஓபிஎஸ்- ஈபிஎஸ். அதில் மாற்று கருத்து இல்லை. அம்மா மர்ம மரணம் பற்றி பதவி பொறுப்பில் இருப்பவர்கள் வாய் திறக்க பேச மறுப்பது ஏன்? அம்மா மர்ம மரணத்தில் சிபிஜ விசாரணைக்கு உத்திரவிடாதது ஏன்?
 

pudukkottai state minister vijayabasker it wing facebook update

2021 ஆட்சி அதிகாரமின்றி தொண்டர்களிடம் செல்லும்போது தொண்டர்களும், அம்மாவின் ஆத்மாவும், கடவுளும் உங்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். உண்மையை கூறுவதால் உள்ளக் குமுறலை கூறுவதால் என் மீது நடவடிக்கை எடுத்தாலும் அம்மாவிற்கு செய்யும் நன்றிக் கடனாக தொடர்ந்து குரல்கொடுப்பேன்.

வேதனையுடன் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ்.
 

pudukkottai state minister vijayabasker it wing facebook update

இதுதான் அந்த பதிவு. இந்தப் பதிவை படிப்பவர்களுக்கு குழப்பமாகவும் உள்ளது அமைச்சர் பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் எப்படி இப்படி எல்லாம் தொடர்ந்து எழுத அனுமதிக்கிறார்கள் என்பதே அந்தக் குழப்பம். விரைவில் அவர் மீது நடவடிக்கை கூட பாயலாம் என்கிறார்கள் அதிமுகவினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.