Skip to main content

கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

elephant

 

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் வனங்கள் அதிகமாக கொண்டது. இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 

 

பெரும்பாலும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. இந்நிலையில் காடுகளில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் உலா வருவதும் இப்பகுதிகளில் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில் வன விலங்குகள் மனிதர்களையும் தாக்குவதோடு, விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் இருந்து வந்த காட்டு யானைகள் தற்போது நகர் புறங்களிலும் உலா வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுவது வாடிக்கையாகவே உள்ளது.

 

 

இன்று அதிகாலை கூடலூர் பகுதியை அடுத்த ஓவேலி கிராமத்தை சேர்ந்த  சரோஜினி என்ற பெண்மனி சீப்புரம் பேருந்து நிலைத்தியத்திற்கு செல்லும் போழுது, எதிர்பாராத விதமாக சுருளிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை எதிரே வந்துள்ளது. அப்போது காட்டு யானையிடமிருந்து தப்பிக்க அவர் வேகமாக ஓடியுள்ளார். ஆனால் யானை விடாமல் துரத்தி அப்பெண்மனியை தாக்கியுள்ளது. அவரின் அலறல்  சத்தத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் சத்தம்போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

 

 

பின்னர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சரோஜினியை உதகை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த கூடலூர் வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காட்டு யானை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒவேலி பகுதயில் காட்டு யானைகள் அதிக அளவில்  நடமாடுவதல் வன துறையினர் அவற்றை வனத்திற்குள் விட்டுமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

Next Story

துக்க வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்; திட்டக்குடியில் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Six women were injured in an electric shock at a funeral home and were admitted to hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் செறுவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது முருகானந்தம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலைச் சொந்த கிராமமான கீழ் செறுவாய் கிராமத்திற்கு அவரது உறவினர்களால் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.