அமிலம் வீசி பெண் கொலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வின்னவனூரில் அமிலம் வீசி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். சங்கீதா என்ற பெண்ணின் முகத்தில் அமிலம் வீசி, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.