Skip to main content

சொத்துக்காக மனைவியைக் கொன்றவர் கைது! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

Wife passed away in assets case police arrested husband

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு(62). இவரது மனைவி ஞானாம்பள்(60). இவர், நேற்று முன்தினம் அவரது வீட்டில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செல்லக்கண்ணு, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

 

அந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த மரக்காணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானாம்பாள் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை புதுச்சேரி, கனகசெட்டிகுளம் பக்தியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து காவல்துறையினர் அவரது கணவர் செல்லக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர். 


அந்த விசாரணையில், தனது மனைவிக்கும் தனக்கும் நேற்று முன்தினம் காலை வாய் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஞானாம்பாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் தானே ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதேசமயம், மருத்துவ பிரேத பரிசோதனையில் ஞானாம்பாள் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஞானாம்பாளில் கணவர் செல்லக்கண்ணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், ஞானாம்பாள் திருமணத்தின்போது அவரது அண்ணன் பாண்டுரங்கன் அவருக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். அந்த நிலத்தை தற்போது செல்லக்கண்ணு தன் பெயருக்கு மாற்றி எழுதிக் தருமாறு மனைவி ஞானாம்பாளிடம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். கணவர் பெயருக்கு எழுதிக் கொடுக்க ஞானாம்பாள் மறுத்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. 


சம்பவத்தன்று சொத்தை எழுதி தர மறுத்த காரணத்தினால் கோபத்தில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த செல்லக்கண்ணு, மனைவி ஞானம்பாளை அடித்த போது அவர் கீழே மயங்கி விழுந்ததும் அவரது கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை மறைக்க வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவரது உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். ஞானாம்பாள் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக செல்லக்கண்ணு நாடகம் ஆடியுள்ளார்’ என காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்