Skip to main content

அங்கன்வாடியில் கலெக்டரின் மகள்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட குழந்தைகள் நிலமையமான அங்கன் வாடிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அத்திட்டத்தி்ன கீழ் நெல்லையின் ஆயுதப்படை மைதானம் அருகே அங்கன் வாடிமையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பான பணியாளராக செல்வராணியும், உதவியாளராக ரேவதி என்பவரும் பணியிலிருக்கின்றனர்.

 

பொதுவாக சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளவர்களின் பிள்ளைகள் தான் இது போன்ற அங்கன் வாடிமையத்தில் சேர்ந்து பயின்றுவருவது மரபு.

 

 The daughter of the Collector of Anganwadi

 

வழக்கப்படி தரையிலமர்ந்து தான் குழந்தைகள் பயில்கின்றனர்.

 

இதில் ஆச்சர்யம் மட்டுமல்ல, கேட்பவர்களின் புருவங்கள் உயருமளவுக்கு விஷயம் என்னவெனில் இந்த மையத்தில் பயில்கிற 20 குழந்தைகளோடு குழந்தையாக நெல்லை கலெக்டர் ஷில்பாவின் இளைய மகளான இரண்டரை வயது கீதாஞ்சலியும் கல்வி பயின்று வருவது தான். ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தன் மகளை இங்கு ஆரம்பகல்விக்காக சேர்த்து தான் கவனிக்கத்தக்கது.

 

இந்த மையத்தில் காலை மதியம், இரண்டு வேளைகளில் வாரநாட்களில் வித விதமான உணவுகள் குழந்தைகளுக்குத் தரப்படுகின்றன, அவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் பொருட்டு படத்துடன் கூடிய பாடம் நடத்தப்படுவதால் கீதாஞ்சலி உட்பட அனைத்து குழந்தைகளும் ஆர்வமுடன் பயில்கின்றனர்.

 

கலெக்டரின் முகாம் அலுவலக ஊழியர்கள் தினசரி காலை கீதாஞ்சலியை அங்கே கொண்டு வந்து விட்டு விட்டு, மாலையில் திரும்ப அழைத்துச் செல்கின்றனர்.

 

கலெக்டரின் மகள் உட்பட அனைத்து குழந்தைகளும் குறித்த நேரத்திற்கு வருகிறார்கள். கற்றுத் தரப்படுகிற முன் பருவக் கல்வியை ஆர்வமுடன் படிக்கிறார்கள். என்கிறார் பணியாளர் செல்வராணி.

 

நான் சென்னையிலிருக்கும் போது கூட என் மகளை அங்குள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் தான் ஆரம்பக்கல்வியில் சேர்த்தேன் அதே முறையில் ஆரம்பகல்விக்காக தான் இங்கே அங்கன் வாடிக்கு அனுப்பியுள்ளேன் என்றார் கலெக்டர் ஷில்பா சாதாரணமாக.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.