Published on 26/10/2018 | Edited on 26/10/2018

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிடவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனவரி மாதமே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏன் இதுவரை நடத்தவில்லை என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.