Skip to main content

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியது ஏன்? வழக்கறிஞர் ராஜசேகர் விளக்கம்!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
rajasekar


கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தில் உயர்மட்ட குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் ராஜசேகர் திடீரென்று விலகியுள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தில் கமலுடன் மிக நெருக்கமாக பயணித்தவர் வழக்கறிஞர் ராஜசேகர். கடந்த வாரம் அவர் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் மய்யம் சார்பில் சென்னையில் இன்று மாதிரி கிராம சபை நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட ராஜசேகர், கமலிடம் தன் சொந்த வேலை காரணமாக இயக்க பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது கமல் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு விடை கொடுத்தார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், இயக்க பணிகள் காரணமாக அவரின் சொந்த வேலைகள் தடைபடுவதால் தான் ராஜசேகர் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்