Skip to main content

  எந்த சினிமா கோவலனை கெடுத்தது? - டி.ஆர். ஆவேசம்

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
rr

 

புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் சர்க்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது.  முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்தார். தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தன்னிடம் அளித்த உறுதியை மீறிவிட்டார் விஜய் என்று அவர் கூறியது கடும் விவாதத்திற்கு உள்ளானது.

 

இதையடுத்து, 'சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, விஜய் புகைபிடிப்பது போன்ற `சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் ட்விட்டர் பக்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் ட்விட்டர் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டது. மேலும், இந்த போஸ்டருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இயக்குநர்  டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது இந்த விவகாரம் குறித்து பேசினார்.  அவர், ‘’சினிமாவில் ஒரு நடிகன் செய்வதை ரசிகர்களும் செய்வார்களா? சினிமாக்காரன் தம் அடிப்பதை பார்த்துதான் மக்கள் தம் அடிக்கிறாங்க என்று சொன்னால் என்னய்யா இது அநியாயம்?

 

சினிமாவை பார்த்துதான் எல்லோரும் கெட்டுப்போறாங்க என்று சொல்லுறாங்க.  அப்படிப்பார்த்தால் சினிமாவே வராத காலத்தில் நடந்துக்கெல்லாம் எது காரணம்? கண்ணகியை விட்டு மாதவியை தேடிப்போனான் கோவலன்.   எந்த சினிமா கோவலனை கெடுத்தது? சமுதாயத்தின் சம்பவங்களைத்தான் சினிமா ரிப்ளக்ட் பண்ணுகிறது.   சினிமாவில் உள்ளதை வைத்து சமுதாயம் நடக்கவில்லை’’ என்று ஆவேசமாக பேசினார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘விமர்சனம்; விமோசனம்’ - தனது ஸ்டைலில் பதிலளித்த டி. ராஜேந்தர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
t.rajendar about vijay political entry

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “அரசியல் என்பது பொது மொழி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பற்றிய கேள்விக்கு இப்போது நான் பண்ணவில்லை விமர்சனம். கடவுள்கிட்ட கேட்கிறதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்” என்றார்.