Skip to main content

'டி23' எங்கே...? தளர்த்திய வனத்துறை... மக்களுக்கு எச்சரிக்கை!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

 Where is 'T23 ...? Forest Department loosens search!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துவந்த 'டி23' புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணி 14 ஆவது நாளாக வனத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தற்பொழுது புலியைப் பிடிக்கும் பணி தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தாலும் வனத்துறை மயக்க ஊசி செலுத்தியே புலியைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் புலி மசினகுடியின் சிங்காரா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதனைக் கைவிட்டு, காடுகளில் மரங்கள் மேல் பரண் அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதேபோல் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கேமராவில் புலியின் நடமாட்டம் இல்லாததால் பரண் அமைத்துத் தேடுதல் நடத்தும் முறையை வனத்துறை கைவிட்டுள்ளது. முன்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினரை விடக் குறைந்த பணியாளர்களே தற்பொழுது புலியைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

 

 Where is 'T23 ...? Forest Department loosens search!

 

ஒருவேளை மீண்டும் புலி கூடலூர் பகுதிக்கே  சென்றிருக்கலாம் எனச் சந்தேகித்துள்ள வனத்துறை, 'டி23' உணவு சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆவதால் மீண்டும் கால்நடைகளை வேட்டையாட வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு மீண்டும் வரலாம் எனவே  அதுவரை புலியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் வனத்தை ஒட்டிய பகுதிகளுக்குக் கால்நடைகளை மேய்க்கச் செல்லவேண்டாம் என வனத்துறை அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்புலி இதுவரை நான்கு பேரையும், 30க்கு மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.