Skip to main content

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

When will schools open in Tamil Nadu? - Important announcement issued by the Minister!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 

 

12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அடுத்தாண்டு மார்ச் 13- ஆம் தேதி 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் மாதம் 14- ஆம் தேதி 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். அடுத்தாண்டு ஏப்ரல் 3- ஆம் தேதி அன்று 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்" என்று அறிவித்துள்ளார். 

 

இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 23- ஆம் தேதி +1, +2- க்கும், செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 16- ஆம் தேதி +1, +2- வுக்கும், டிசம்பர் 19- ஆம் தேதி அன்று 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23- ஆம் தேதி முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 2- ஆம் தேதி அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.