Skip to main content

"எங்களையும் அரசு ஊழியராக்க வேண்டும்" - தமிழக அங்கன்வாடி ஊழியர்கள்

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"We too should be made government employees" - Tamil Nadu Anganwadi workers

 

தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக முழுவதும் தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கிளைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 54,437 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்தி 4 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.  

 

‘எங்களுக்கு அரசு பணியில் இருப்பதாக அரசு வழங்கும் எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை, அதேபோல் அரசிடமும் எங்களுக்கான அரசு ஊழியருக்கான எந்த பயனும் கிடைப்பதில்லை, நாங்கள் யார்’ என்று போராட்டத்தில் கேள்வியை எழுப்பினர். பிறகு மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். 

 

இவர்களுக்கு ஆரம்பகட்ட மாத ஊதியமாக 7,700 முதல், 30 வருடம் பணிபுரிந்த பிறகு 12 ஆயிரம்வரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்குப் பணி கொடையாக 10 லட்சம் ரூபாயும் உதவியாளருக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

"We too should be made government employees" - Tamil Nadu Anganwadi workers

 

இந்தப் போராட்டம் சென்னையில் மட்டும் 12 இடங்களில் நடைபெற்றது. அதில் முதல் போராட்டம் கிண்டியில் தொடங்கி புழல்வரை நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அங்கன்வாடி மாநில பொதுச்செயலாளர் டெஷி, “எங்களது இந்த மூன்று கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சமூகநலத்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதே இல்லை, நாங்கள் அரசு சொல்லும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம். 

 

அரசு பணி என்றுதான் பெயர், ஆனால் எந்த பயனும் இல்லை. ‘அங்கன்வாடி ஊழியர்களுக்கு 21 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 18 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் அறிவித்தால் போராட்டத்தை நிறுத்திக்கொள்வோம். இல்லையேல் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார். இது தொடர்பாக பேசிய அங்கவன்வாடி இயக்குனர் கவிதாராமு “அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுகொண்டோம். கூடிய விரைவில் அவர்களுக்கான நம்பிக்கைக்குரிய பதில் கிடைக்கும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது