Skip to main content

“தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பாக நன்றி கூறுகிறோம்” - தூத்தூர் தங்க. தர்மராஜன்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

We thank the Chief Minister of Tamil Nadu on behalf of the farmers

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (26-11-2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரியலூர் மாவட்ட காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர். தங்க. தர்மராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி 26-11-2020 முதல் தலைநகர் டெல்லியில் ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆகையால் இந்த வேளாண் சட்டத்தை வாபஸ் பெறப்படும்  என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி.

 

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு மேலும் சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக முதல்வருக்கும் விவசாயிகள் சார்பாக நன்றி கூறுகிறோம். மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகள் அனைத்திலும் யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அந்த உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் கூடுதலாக யூரியா பொட்டாஷ் போன்ற தேவையான உரங்கள் இறக்குமதி செய்ய வேண்டும்.

 

பருவமழை தொடர்ந்து அதிக அளவில் பொழிந்ததன் காரணமாக நெல், பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. ஆகவே தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை, வாய்க்கால்கள் அனைத்தையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, தூர் வார வேண்டும். ஜெயங்கொண்டம் - வீ கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையில் மணகதி என்ற ஊரில் சுங்க வரி டோல் பூத் அமைக்கப்படுகிறது. வாகனங்கள் அதிக அளவில் செல்கிற பகுதி என்பதால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் செலவீடுகள் ஆகும். ஆகவே அந்த டோல் பூத் அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.