Skip to main content

வீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட  இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

 

help

 

இப்படி ஒரு கொடூர தாக்குதலை கண்டு இந்திய நாடு பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது. அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் நகரம் முதல் கிராமங்கள் வரை  அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் பாக் தீவிரவாத அமைப்பை கண்டித்து போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.

 

அதுபோல் வீரமரணம் அடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்காங்கே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமைதி ஊர்வலங்களை நடத்தியும்,மெழுகுவர்த்தி ஏற்றிஅஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள். அதுபோல் கோவில்கள்,மசூதிகள், சர்ச்சுகளில் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்காக கூட்டுப் பிரார்த்தனையும்  கூட மும்மதத்தினரும் ஜாதி மதம் பார்க்காமல் செய்து வருகிறார்கள்.

 

 

இந்த நிலையில் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் சின்சொந்த மாவட்டமான தேனியில்  வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நடத்தினார். இக்கூட்டத்திற்கு வழக்கம்போல் மாவட்ட அளவில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்மனு கொடுப்பது வழக்கம் அதுபோல் மனு கொடுத்தனர்.

 

அப்பொழுது இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமிபுரம் அருகே இருக்கும் சரத்துப்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த  கூலி தொழிலாளியான பொன்னையன் பாக். தீவிரவாதிகளால் வீரமரணமடைந்த நமது இந்திய ராணுவ வீரர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் வழங்கினார். அதை கண்டு கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும் அந்த கூலித்தொழிலாளியின் பெருந்தன்மையை பாராட்டினார்கள். 

 

இதுபற்றி சரத்துப்பட்டி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த பொண்ணையனிடம்  கேட்டபோது... கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு மனம் நொந்து போய்விட்டேன். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதைப்பற்றி எனது மனைவி கம்மாளச்சியிடம்  சொன்ன போது அவரும் உதவி செய்யுங்கள் என்று  கூறினாள். ஆனால் எனக்கு ஐந்து பிள்ளைகளில் மூன்று ஆண் இரண்டு பெண் பிள்ளைகளில் ஐந்து பேரையுமே திருமணம் செய்து கொடுத்து விட்டு நானும் என் மனைவியும் தனியாக எம்ஜிஆர் காலணியில் இருந்துகொண்டு தினசரி 270 ரூபாய் வீதம் கூலி வேலைக்கு போய் வருகிறோம். அந்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தும் வருகிறேன். இப்படி கூலிவேலைக்குச்  சென்று அதில் மிச்சப்படுத்தி வைத்து இருந்த பணம்தான் ஆயிரம் ரூபாய். அந்த பணத்தைதான் மாவட்ட கலெக்டரிடம் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியாக வழங்கினேன் என்று கூறினார்.

    

இப்படி கூலித்தொழிலாளியான பொன்னையன் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்ததை கண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களும், அதிகாரிகளும் கூட பொன்னையனின் மனிதாபிமானத்தை கண்டு வாழ்த்தினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.